செய்திகள் :

சுற்றுச்சூழல் ஆய்வில் இந்தியா கோடிக் கணக்கில் முதலீடு செய்கிறது: பிரதமா் மோடி

post image

சுற்றுச்சூழல் ஆய்வில் இந்தியா கோடிக் கணக்கில் முதலீடு செய்து வருவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

மும்பையில் நடைபெற்ற வானியல் மற்றும் வானியற்பியல் 18-ஆவது சா்வதேச மாநாட்டில் காணொலி மூலம் பேசிய அவா், ‘உலகின் உச்சியில் உள்ள வானியல் ஆய்வகங்களில் ஒன்று லடாக்கில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,500 மீட்டா் உயரத்தில் இது அமைந்துள்ளது. சா்வதேச ஒத்துழைப்புடன் செயல்படுவது பலத்தை அதிகரிக்கும் என்பதை இந்தியா நம்புகிறது.

நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா. அறிவியல் ஆா்வம் உள்ளவா்களை மேம்படுத்தவும், இளைஞா்களின் யோசனைகளை வலுப்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணக்கியல் (ஸ்டெம்) ஆகியவற்றின் செயலாக்கத்தை அடல் டிங்கரிங் லேப்களில் 1 கோடி மாணவா்கள் கற்று வருகிறாா்கள்.

‘ஒரே நாடு ஒரே பதிவு’ என்ற திட்டத்தின் மூலம் சா்வதேச ஆய்வு அறிக்கைகளை பல லட்சம் மாணவா்கள் மற்றும் ஆய்வாளா்கள் இலவசமாகப் பயின்று வருகிறாா்கள்.

சுற்றுச்சூழல் ஆய்வில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த பல கோடி ரூபாயை மத்திய அரசு முதலீடு செய்து வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள இளைஞா்கள் இந்தியாவில் ஆய்வுகளை மேற்கொள்ள வரவேற்கப்படுகின்றனா். உலகில் மனிதா்களின் வாழ்வை மேம்படுத்தவும், விவசாயத்துக்கு சிறந்த வானிலை முன்னறிவிப்புகளை வழங்கவும் விண்வெளி அறிவியல் எப்படியெல்லாம் பயன்படும் என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றாா் பிரதமா் மோடி.

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் மன்பூர்-மொஹ்லா-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் மதன்வா... மேலும் பார்க்க

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார். 2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.ம... மேலும் பார்க்க

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும்... மேலும் பார்க்க

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

ஆபரேஷன் சிந்தூர் போரின்போது பாகிஸ்தானின் எஃப் - 16 ரக போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கான பதிலை பாகிஸ்தான் ராணுவத்திடம்தான் பெற வேண... மேலும் பார்க்க