செய்திகள் :

சுற்றுலா சென்ற இடத்தில் சிங்கம் கொடூரமாக தாக்கி பலியான பயணி - என்ன நடந்தது?

post image

தென்னாப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெர்ன்ட் கெப்பல் என்ற தொழிலதிபரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 30ஆம் தேதியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. செஸ்ஃபோன்டைன் (Sesfontein )பகுதியில் உள்ள ஹோனிப் ஸ்கெலிட்டன் கோஸ்ட் கேம்ப் அருகே தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைக் கழிப்பதற்காக, ஒரு விடுதியில் கெப்பல் தங்கியிருக்கிறார்.

சிங்கம்

அப்போதுதான் இந்த கொடிய தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெடிஷிபாண்டா ஹமுனியேலாவின் அறிக்கையின்படி, கழிப்பறையைப் பயன்படுத்த கெப்பல் தனது அறையில் இருந்து வெளியே வந்தபோது சிங்கம் அவரைப் பதுங்கியிருந்து தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

நமீபிய காவல்துறை சார்பில் இந்த சம்பவம் தொடர்பான முழு அறிக்கையும் விரைவில் விசாரணை நடத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த பகுதி, மலைப்பகுதிகளில் சுற்றித் திரியும் பாலைவன சிங்கங்களின் எண்ணிக்கைக்கு பரவலாக அறியப்படுவதாகவும், 2023 புள்ளிவிவரங்களின்படி, சுமார் 60 பெரிய சிங்கங்களும் அதை குட்டிகளும் இப்பகுதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குழந்தை இறந்துவிட்டது" - அரசு மருத்துவமனை மறுத்ததால் தனியார் மருத்துவமனையில் பிரசவம்; என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.அங்குள்ள ஹசரிபாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மனீஷா குமாரி என்ற கர்ப்பிணிப் பெண் ... மேலும் பார்க்க

Mahua Moitra: TMC எம்.பி மஹுவா மொய்த்ரா பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி-யுடன் திருமணம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக எம்.பி.யாக இருக்கிறார். ஏற்கனவே வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திரு... மேலும் பார்க்க

நெதர்லாந்து மியூசியத்தில் `200 ஆண்டுகள் பழமையான ஆணுறை!' - அதில் உள்ள படம் சொல்வதென்ன?

19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணுறையில், ஒரு கன்னியாஸ்திரி மற்றும் ம... மேலும் பார்க்க

ஒரேஇடத்தில் நின்றுகொண்டு மாதம் ரூ.5 - 8 லட்சம் வரை சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர்! - இது எப்படி?

மும்பையின் புறநகர் பகுதி ஆட்டோக்களால் சூழப்பட்ட நெருக்கடியை சந்தித்து வரும் ஒரு பகுதியாகும். இந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வண்டியை எங்கேயும் கொண்டு செல்லாமல் ... மேலும் பார்க்க

ம.பி: மர்ம முறையில் கணவர் மரணம்; காணாமல் போன பெண்- தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்தது என்ன?

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன் மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் தேனிலவுக்கு மேகாலயா சென்றுள்ளனர். அங்கு இருவரும் மே 23ஆம் தேதி காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ந... மேலும் பார்க்க

ஆக்ரா: ”ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க...” - யமுனை நதியில் மூழ்கி பலியான 6 பெண்கள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆற்றங்கரையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவின் சிக்கந்த்ரா காவல் நிலையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், முழு க... மேலும் பார்க்க