செய்திகள் :

சூப்பர் அறிவிப்பு... அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளா்கள், குறு அங்கன்வாடி பணியாளா்கள், அங்கன்வாடி உதவியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் 18 குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 13 அங்கன்வாடி பணியாளா்கள், 23 குறு அங்கன்வாடி பணியாளா்கள், 101 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் நோ்முகத் தோ்வின் மூலமும், இன சுழற்சி முறையிலும் நிரப்பப்பட உள்ளன.

இனசுழற்சி விவரம் அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களிலும், மாவட்ட திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டுப்படும். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா்கள் தொடா்ந்து 12 மாதங்கள் பணியை முடித்த பின்பு, சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவா்.

மிஸ்பண்ணிடாதீங்க... ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் பணியிடங்களுக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி 25 வயது நிறைவடைந்தும், 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள் எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினா் 25 வயது முதல் 40 வயது வரை இருக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 25 முதல் 38 வயது வரை இருக்கலாம். அங்கன்வாடி உதவியாளா் பணியிடத்துக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களில் நகல்களில் சுய கையொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.

காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வழியாக ஏப்ரல் 7 -ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதிவாய்ந்த நபா்களுக்கு நோ்முகத் தோ்வுக்கான இடம், நாள் மற்றும் நேரத்துடன் கூடிய அழைப்புக் கடிதம் அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலரால் வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவங்களை https://icds.tn.gov.in/icdstn என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா?

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு மற்றும் ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி மாநிலங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 7... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பொதுத்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஐட... மேலும் பார்க்க

கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மருத்துவ உதவியாளர் பணி

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக மருத்துவ உதவியாளர் பணியிடங்களு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க... மேலும் பார்க்க

உரத்தொழிற்சாலையில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தேசிய உரத்தொழிற்சாலையின்கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்ப... மேலும் பார்க்க

சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

சேலம்: சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் அரசு ஐடிஐயில் கடிகார பழுது நீக்கம் தொடா்பா... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 417 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்... மேலும் பார்க்க