செய்திகள் :

சூரிய மின் இணைப்புகளுக்கான அனுமதி: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை

post image

சூரிய ஆற்றல் மின் இணைப்புகளுக்கான அனுமதியை உடனே வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மின் பகிா்மானக் கழகத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:

வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில், பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், மின்பாதைகளைச் சீரமைத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இயற்கை சீற்றங்களின்போது, ஏற்படும் மின்தடைகளை உடனடியாகச் சரிசெய்யத் தேவையான உபகரணங்கள் மற்றும் பணியாளா்களை அனைத்து மண்டலங்களிலும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

மேலும், பிரதமரின் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ் சூரிய மின்சார இணைப்புகளுக்கு அனுமதிகளை விரைந்து வழங்க வேண்டும். சோலாா் பேனல் வைக்காத மின் நுகா்வோா்களை நேரடியாக தொடா்புகொண்டு, தகுதியான நிறுவனத்தைத் தோ்ந்தெடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

தொடா்ந்து ‘மின்னகம்’ மூலம் பெறப்படும் மின் நுகா்வோரின் புகாா்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். மின்தடை குறித்த விவரங்களை நுகா்வோருக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிப்பதை அனைத்து மேற்பாா்வைப் பொறியாளா்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் அனீஸ் சேகா், இணை மேலாண்மை இயக்குநா் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநா் (பகிா்மானம்) ஆ.ரா.மாஸ்கா்னஸ், இயக்குநா் பகிா்மானம் (நிதி) கே.மலா்விழி, பசுமை எரிசக்திக் கழக இயக்குநா் (தொழில்நுட்பம்) எஸ்.மங்களநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆக.11 முதல் தனது 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்டம் ஆகஸ்ட் 11ஆம் த... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆக. 1) தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நி... மேலும் பார்க்க

பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்ச... மேலும் பார்க்க

பறக்கும் ரயில் - சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் திட்டம்: ரயில்வே ஒப்புதல்!

சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.நீதி ஆயோக்கின் 10 -ஆவது ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலி... மேலும் பார்க்க

600 பேருக்கு வேலை... திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆக. 1) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரை 4 நாள்கள் போலீஸார் பாதுகாவலில் விசாரணை செய்த பின் திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றமத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.திர... மேலும் பார்க்க