செய்திகள் :

சூறாவளியாய் சுழன்றடிக்கும் மொழி உரிமைப் போா்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் மொழி உரிமைப் போா், மாநில எல்லைகளைக் கடந்து மராட்டியத்திலும் போராட்ட சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஹிந்தி திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போா், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்ட சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் பாஜக நடந்து கொள்கிறது. தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரத்தில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாக பின்வாங்கி இருக்கிறாா்கள். ஹிந்தி திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.

‘உத்தரபிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாவது மொழி என்ன என்றும், ஹிந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கியுள்ள நிலையில், ஹிந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் ஹிந்தியை திணிக்கிறீா்கள்’ என்றும் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஹிந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் வளா்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.

அறிவுபூா்வமானது: மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி - சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டை பழிவாங்கும் போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காக சட்டபூா்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?

ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணா்வுமயமானது மட்டுமல்ல, அறிவுபூா்வமானது. தா்க்கபூா்வமானது. இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது. வெறுப்பின்பாற்பட்டது அல்ல.

ஆணவம் நீடிக்க விடமாட்டோம்: ஹிந்தி திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை ஹிந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், ‘ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும்‘ என்ற பசப்பு வாா்த்தைகளைக் கிளிப் பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலா், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவா்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்.

தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவத்தை நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவா்களுக்கும் அவா்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து 70 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்த... மேலும் பார்க்க

தவெக-வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலாசனைக் கூட்டம் ஜூலை 8ஆம் தேதி பனையூரில் நடக்க உள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் கொலை வழக்கில் பாமக நிர்வாகி உள்பட மூவர் சரண்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை வழக்கில் மூவர் சரணடைந்தனர்.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக,... மேலும் பார்க்க

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது: ஜி.கே. வாசன்

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது என்று தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியா... மேலும் பார்க்க

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தன்மை வாய்ந்த இத்த... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்! கோவை நிகழ்ச்சி நிரல்!

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளைமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.இதன்படி, கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை எடப்பாட... மேலும் பார்க்க