செய்திகள் :

சூலூரில் கழிவுப் பஞ்சு குடோனில் தீ விபத்து: 70 லட்சம் ரூபாய் சேதம்

post image

சூலூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் பஞ்சு குடோனில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான கழிவுப் பஞ்சு குடோன் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் கலங்கல் சாலையில் உள்ளது.

இங்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டு, தீயணைப்புத் துறையினரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்களும் அருகில் இருந்தவர்களும் தீயை அணைக்க முயன்ற போதிலும், பலமாக வீசிய காற்றால் தீ வேகமாகப் பரவியது.

தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்.

கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மருத்துவ உதவியாளர் பணி

தகவலறிந்து வந்த சூலூர், கருமத்தம்பட்டி, பீளமேடு ஆகிய இடங்களிலிருந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வருகின்றன.

இருப்பினும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள கழிவுப் பஞ்சு, ரூ.20 லட்சம் மதிப்பிலான பஞ்சு பிரிப்பு இயந்திரங்கள் மற்றும் குடோன் கட்டடம் முற்றிலும் எரிந்து நாசமாயின. மெத்தை, தலையணை தயாரிப்புக்கு பயன்படும் இந்தப் பஞ்சுகளால் ஏற்பட்ட சேதம் ரூ. 70 லட்சத்தைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குடோனில் 75 டன் கழிவுப் பஞ்சு சேமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

முந்தைய தீ விபத்தின் சேதத்தை காப்பீடு நிறுவனம் ஆய்வு செய்யவிருந்த நிலையில் இந்தப் புதிய தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து சூலூர் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

உரத்தொழிற்சாலையில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடி: கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக சீலா ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்ய... மேலும் பார்க்க

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில்: 3 ஆவது நாளாக தரிசனம் செய்ய வராத மக்கள்!

விழுப்புரம்: மேல்பாதி அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு ... மேலும் பார்க்க

ஜகதீப் தன்கருடன் ஆர்.என். ரவி சந்திப்பு

புதுதில்லி: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தில்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்து பேசினார். மேலும் பார்க்க

மதுவிலக்கு: வனப்பகுதியில் சிறப்பு சோதனை

நெய்வேலி: கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் மதுவிலக்கு சம்பந்தமாக சிறுபாக்கம் காவல் சரகப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சனிக்கிழமை சிறப்பு சோதனை நடத்தினர். காட்டுப்பகுதிகளில் கள்ளத்தனமாக சாரா... மேலும் பார்க்க