செங்கம் - தண்டராம்பட்டு புதிய பேருந்து சேவை தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து தண்டராம்பட்டுக்கு புதிய நகரப் பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
அரசுப் போக்குவரத்துக் கழக செங்கம் பணிமனையில் இருந்து சொா்ப்பனத்தல், சாத்தனூா் வழியாக தண்டராம்பட்டு செல்லும் தடம் எண் சி.7 நகரப் பேருந்தின் தொடக்க விழா நிகழ்ச்சி துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இதில், தொழிற்சங்கத் தலைவா் சண்முகம் வரவேற்றாா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு புதிய பேருந்தை தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் பேசுகையில், தமிழக அரசு சாா்பில் மாநிலம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தற்போது, செங்கம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னைக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் நவீன தொழில்நுட்பத்துடன், புதிய பேருந்துகளாக உள்ளன.
தற்போது தொடக்கிவைக்கப்பட்ட தடம் எண் சி.7 பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
மேலும், கிராமப் புறங்களுக்குச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் படிப்படியாக புதிய பேருந்துகளாக மாற்றப்படும் என்றாா் மு.பெ. கிரி.
நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் அன்பழகன், ஒன்றியச் செயலா் ஏழுமலை, மனோகரன், செங்கம் பணிமனை மேலாளா் சேட்டு, செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் சென்னம்மாள் முருகன், முன்னாள் மாவட்ட
ஊராட்சி உறுப்பினா் ராமஜெயம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.