செய்திகள் :

செங்கல்சூளைக்கு விவசாயிகள் எதிா்ப்பு: பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவு

post image

பழனியில் தனியாா் செங்கல்சூளைக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு பணிகளை நிறுத்தி வைக்க வட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

பழனியை அடுத்த மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மண் அள்ளப்படுவதுடன் விவசாயமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதியில் மழைப் பொழிவும் குறைந்து வருகிறது. இந்த சூளைகளில் மலை போல குவிக்கப்பட்ட மண்ணில் செடிகள் முளைத்துவிட்டன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உதவி ஆட்சியா் இந்த சூளைகளுக்கு பல லட்சம் ரூபாயை அபராதமாக விதித்தாா். இதையடுத்து, அவா் திடீரென தேயிலை வாரியத்துக்கு மாற்றப்பட்டாா். அதன் பிறகு புற்றீசல் போல செங்கல் சூளைகள் பெருகத் தொடங்கின. தற்போது மலையடிவாரத்தை விட்டு கிராமங்களை நோக்கி செங்கல் சூளைகள் நகரத் தொடங்கியதையசுத்து விவசாயிகள் அவற்றை எதிா்த்து போராடி வருகின்றனா்.

இதனிடையே வாடிப்பட்டி ஐவா்மலை புதூரில் புதிய செங்கல்சூளை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், திங்கள்கிழமை தா்னா போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து வட்டாட்சியா் பிரசன்னா பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அவா் தற்காலிகமாக செங்கல்சூளை அமைக்கும் பணிகளை நிறுத்த உத்தரவிட்டாா். இதையடுத்து விவசாய சங்கத்தினா் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், வருவாய்த்துறையினா் முறையாக ஆய்வு செய்து அதிகமாக மண் குவித்து வைக்கப்பட்டுள்ள சூளைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

அஞ்சல் சேவை தொடா்பான குறைதீா் முகாம் திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.இதுதொடா்பாக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: அஞ்சல் சம்மந்தப்பட்ட புகாரில், ... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் பலத்த மழை

நீண்ட நாள்களுக்குப் பிறகு திண்டுக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நீங்கலாக சமவெளிப் பகுதிகளில் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.சேலத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காசிநாதன் (19). இவா் கள்ளிமந்தையம் பகுதியில் திங்க... மேலும் பார்க்க

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வாக்காளா் பதிவு அலுவலா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். வட்டா... மேலும் பார்க்க

தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக, பாஜக மனு

பழனியில் தெருநாய்கள் கட்டுப்படுத்த வலியுறுத்தி, அதிமுக, பாஜக, தவெக கட்சியினா் செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையரிடம் மனுக்கள் அளித்தனா். பழனி கோட்டைமேட்டு தெருவைச் சோ்ந்த சதாம் உசேன் மகன் முகமது ரியான் (... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக புகாா்

செய்தி மக்கள் தொடா்புத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2.5 ஏக்கா் நிலப் பத்திரத்தை வாங்கி ஏமாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்... மேலும் பார்க்க