செய்திகள் :

சென்னையிலிருந்து லக்னௌ புறப்பட்ட விமானம் பாதி வழியில் திரும்பியது: அவசரமாக தரையிறக்கம்!

post image

சென்னை: சென்னையிலிருந்து உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌக்குப் புறப்பட்ட விமானம் இன்று(மே 27) காலை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னையிலிருந்து 160 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை(மே 27) அதிகாலை 5.40 மணிக்கு லக்னௌக்கு புறப்பட்டது. இந்த நிலையில், நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது அந்த விமானத்திலிருந்த பயணி ஒருவருக்கு உடல்நலக் குறைவால் அவசரமாக மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் நிலை உருவானது.

இதனையடுத்து, இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதன்பின், அந்த விமானம் காலை 6.30 மணிக்கு சென்னையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

விமான நிலையத்தில் தயார் நிலையிலிருந்த மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்ட பயணிக்கு மருத்துவ முதலுதவி சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர். அதன்பின் அந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து, காலை 7.20 மணிக்கு அந்த விமானம் மீண்டும் லக்னௌக்கு புறப்பட்டுச் சென்றது.

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை க... மேலும் பார்க்க

தேமுதிகவுடன் சுமூக உறவு உள்ளது- எடப்பாடி பழனிசாமி

தேமுதிகவுடன் சுமூக உறவு உள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மதுரையில் கால்வாயை திரைச்சீ... மேலும் பார்க்க

அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின்... மேலும் பார்க்க

தொடர் வெற்றிக்குக் காரணம் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

திமுக தொடர்ந்து வெற்றி பெருவதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய கூட்டணி என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் ... மேலும் பார்க்க

தில்லி மதராஸி குடியிருப்பு இடிப்பு: தமிழகம் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்களின் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவ... மேலும் பார்க்க

புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ப... மேலும் பார்க்க