செய்திகள் :

சென்னையில் கோலாகலமாக சங்கமித்த நட்சத்திரங்கள் - நெகிழ்ச்சிப் பதிவு

post image

நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு வருடமும் சந்தித்து தங்களது நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் ‘80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்’ நிகழ்ச்சி, இந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் ராஜ்குமார் சேதுபதி-ஸ்ரீபிரியா இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த 31 நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.

பள்ளி, கல்லூரி நண்பர்கள் கூடிப் பேசுவதைப் போல, இந்த நட்சத்திர சங்கமம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

80s Stars Reunion
80s Stars Reunion

கடந்த ஆண்டு கனமழை காரணமாக நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டிற்கான சந்திப்பு நேற்று (அக்டோபர் 4) மாலை சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீபிரியா தம்பதியரின் இல்லத்தில் நடந்தது.

வெறும் ஆர்ப்பாட்ட கொண்டாட்டமாக இல்லாமல், அன்பின் வெளிப்பாடாக அமைந்த இந்த நிகழ்வை நடிகைகள் லிஸ்ஸி லட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

இந்த ரீயூனியனில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழித் திரைத்துறைகளைச் சேர்ந்த 31 நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

80s Stars Reunion
80s Stars Reunion

சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா, நதியா, ராதா, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், ஜெயசுதா, சுமலதா, ரஹ்மான், குஷ்பூ, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், லிஸ்ஸி, நரேஷ், சுரேஷ், ஷோபனா, மேனகா, ரேவதி, பிரபு, ஜெயராம், அஸ்வதி ஜெயராம், சரிதா, பானு சந்தர், மீனா, லதா, ஸ்வப்னா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இது குறித்து ஏற்பாட்டாளர்கள் சுஹாசினி மணிரத்னம் மற்றும் லிஸ்ஸி லட்சுமி பேசுகையில், "இந்த நிகழ்வை ஒருங்கிணைத்ததில் பெரும் மகிழ்ச்சி. எங்களுக்கிடையேயான நட்பு, அன்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு தருணமாக இந்த சங்கமம் அமைந்தது" என்று தெரிவித்திருக்கின்றனர்.

Kantara: `நான் நடிச்சிருக்கேன்னு நிறைய பேருக்கு தெரியாது' - `காந்தாரா' அனுபவம் பகிரும் சம்பத் ராம்

ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் சாண்டில்வுட்டின் பக்கம் திருப்பியிருக்கிறது காந்தாரா சாப்டர் 1'. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. விஷுவலாக ... மேலும் பார்க்க

Bison:``மாரி செல்வராஜ் நான்தான் பாடலை பாடணும்னு முடிவாக சொல்லிட்டாரு!" - `பைசன்' பற்றி பாடகர் சத்யன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பைசன்' திரைப்படம் இந்தாண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரவிருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகியிருக்கும் பைசன்' படத்தின் துடிப்பான பாடல்கள் அடுத்தட... மேலும் பார்க்க

``ராஜ்கிரண் சாருக்கு அட்வான்ஸ் கொடுத்தப்போ கை நடுங்குச்சு!" - பிளாஷ்பேக் சொல்லும் கஸ்தூரி ராஜா!

மில்லேனியல்ஸ்க்கு 'என் ராசாவின் மனசிலே', 90ஸ் கிட்ஸ்க்கு 'துள்ளுவதோ இளமை' போன்ற படங்களுக்காக பெயர் பெற்றவர் கஸ்தூரி ராஜா. கிராமத்துக் காவியங்களாக இருக்கும் பெரும்பாலான இவரின் படங்கள், அவ்வகைக்கே ஓர் ப... மேலும் பார்க்க

̀" 'கடைசி விவசாயி' பட கடைசி சீனில் தாத்தா கண் முழிக்கவில்லை என்றால்..." - ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேட்டி

``காவ்யா வெறும் ஒரு கேம் டெவலப்பர் கதாபாத்திரம் கிடையாது. அவள் ரொம்ப கோபப்படும் ஒரு பெண், அதுவும் அவங்க அம்மா கூட அதிகமா கோபப்படுவாள். ஒரு நடிகையா நான் அந்த கதாபாத்திரத்தை அனுதாபப்பட்டு பார்க்கணும். ந... மேலும் பார்க்க

Vidharth: ``நம் சமூகத்தில் இயல்பாக ஒரு ஸ்கேம் நடந்துகொண்டிருக்கிறது!" - ̀மருதம்' குறித்து விதார்த்

எளிமையான தோற்றத்திலும் உணர்ச்சி நிறைந்த நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் விதார்த், தனது புதிய திரைப்படமான `மருதம்' பற்றி விகடனுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்கள... மேலும் பார்க்க

`` நான் டைரக்‌ஷன் பக்கம் வரவேண்டும் என பாலா சார்..." - இயக்குநராக அறிமுகமாவது குறித்து வரலட்சுமி

கூடிய விரைவில் இயக்குநராகக் களமிறங்குகிறார் நடிகை வரலட்சுமி. அவர் இயக்கும் திரைப்படத்திற்கு `சரஸ்வதி' எனப் பெயரிட்டிருக்கிறார். இயக்குவதோடு படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். பி... மேலும் பார்க்க