செய்திகள் :

சென்னையில் மனைவி கண் முன் வெட்டி கொல்லப்பட்ட 'ஏ பிளஸ் ரௌடி' ராஜ்

post image

சென்னை மணலி சின்ன சேக்காடு வேதாச்சலம் தெருவில் வசித்து வந்தவர் ராஜ் என்கிற தொண்டை ராஜ் (40).

இவர் எம்.கே.பி. நகர் காவல் நிலைய 'ஏ பிளஸ்' ரௌடி. இவர் கடந்த 20-ம் தேதி மாலை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகர் மெயின் ரோடு பகுதியில் மனைவி தீபாவுடன் நடந்து சென்றார்.

அப்போது பைக்கில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் ராஜைச் சரமாரியாக வெட்டியது.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தீபா, கொலையைத் தடுக்க முயன்றார். ஆனால் அந்தக் கும்பல், ராஜை வெட்டிக் கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

இதையடுத்து தீபா, வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கைது

தொடர்ந்து ராஜ் கொலை குறித்து வழக்குப் பதிந்த போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

போலீஸாரின் தேடுதல் வேட்டையில் வியாசர்பாடியைச் சேர்ந்த சூர்யா (27), எம்.கே.பி. நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் (25), சப்பை மூக்கு அஜித் (25), முருகன் (28) ஆகிய 4 பேர் சிக்கினர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி, அந்நால்வரையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 5 கத்திகள், புல்லட் உள்பட இரண்டு பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட ராஜ், வியாசர்பாடி உதயசூரியன் நகரில் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார்.

இவர் மீது கொலை உள்பட 12 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், ராஜுக்கு எதிரிகளால் கொலை மிரட்டல் வந்ததையடுத்து தன்னுடைய இருப்பிடத்தை மணலிக்கு மாற்றினார்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி மனைவியுடன் வியாசர்பாடிக்கு வந்திருந்தார் ராஜ். இதைத் தெரிந்த அவரின் எதிர் டீம், பக்கவாக பிளான் போட்டு ராஜை மனைவியின் கண் முன்னால் கொலை செய்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருச்சி: கட்டிலில் படுத்திருந்த இளைஞர் எரித்துக் கொலை; நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (வயது 26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இருவருக்கும் இன்னும் திருமணம்... மேலும் பார்க்க

விருதுநகர்: மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராணுவவீரர்; விரட்டி பிடித்த மக்கள்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்து சென்ற‌ மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது, நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க

மும்பை: வாகனங்களுடன் வாள் வீச்சு சண்டை; ரகளை செய்த சிறுவரை வளைத்துப் பிடித்த போலீஸ்; என்ன நடந்தது?

மாநகராட்சி பேருந்துமும்பை பாண்டூப் பகுதியில் மாநகராட்சி பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சிறுவர் கையில் வாளுடன் பேருந்தைத் தடுத்து நிறுத்தினார்.அவர் பேருந்து முன்பு நின்... மேலும் பார்க்க

ஹோட்டல் உரிமம் வழங்க ரூ.3,000 லஞ்சம்; துப்புரவு ஆய்வாளருக்கு 11 வருடம் கழித்து 2 ஆண்டுகள் சிறை

கரூர் தான்தோன்றிமலையில் ரமேஷ்குமார் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இதற்கு உரிமம் பெற கடந்த 2014 - ம் ஆண்டு, அக்டோபர் மாதம் கரூர் நகராட்சியில் தான்தோன்றிமலை பிரிவு துப்புரவு ஆய்வாளரக அப்போது பணியாற்றி... மேலும் பார்க்க

திருச்சி: 'சாக்கடை கலந்த குடிநீரா, திருவிழா அன்னதானமா?' - மூன்று பேர் பலியும், அதிர்ச்சி பின்னணியும்

திருச்சி, உறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதனால் , இப்பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 3 பேர் மர்மமான ம... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்: சீரியல் செட் பிரிக்கும்போது தவறி விழுந்து ஊழியா் பலி - திருச்சியில் சோகம்

திருச்சி, திருவெறும்பூா் அருகே திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சாா்பில் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பட்டிமன்ற விழா நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க