செய்திகள் :

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் தொடர்பாக காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய சுங்க தலைமை அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது.

சமீபமாக பள்ளிகள், முக்கிய அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் என இந்தியா முழுவதுமே வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தில்லி உயர்நீதிமன்றம், மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Bomb threat to the Chennai High Court

இதையும் படிக்க | நேனோ பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

நாகையில் விஜய் பரப்புரை: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!

நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள பரப்புரைக்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை (செப். 20) காலை 11 மணியளவில் நட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 3,126 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவல... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.செப். 19 தமிழகத்தில் ஒருசில இடங்களில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கரும்பு வெட்டும் அண்ணன், தம்பி பலி!

விழுப்புரத்தில் கரும்பு வெட்டச் சென்ற சகோதரர்கள் இருவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கொங்கராயனூர் கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க

நாகை: நாளை விஜய் பரப்புரையில் இடம் மாற்றம்!

நாகை மாவட்டம், புத்தூர் அண்ணா சிலை அருகே பரப்புரை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதியளித்தது.அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் ஈ... மேலும் பார்க்க

வேலுநாச்சியார் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகத் திகழ்ந்த வேலுநாச்சியாரின் வீரத்த... மேலும் பார்க்க