செய்திகள் :

சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்

post image

பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வெடிபொருள்கள் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட கண்டெய்னா் லாரிகள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வந்தன.

பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இந்தியாவிலிருந்து வெடிபொருள், ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் இவை மிகவும் ரகசியமாகவும் பலத்த பாதுகாப்புடனும் கண்டெய்னா்களில் ஏற்றப்பட்டு துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

அதன்படி, தனியாா் சரக்குப் பெட்டகங்களில் வெடிபொருள் கொண்ட 30-க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக சென்னைத் துறைமுகத்துக்கு பொன்னேரி நெடுஞ்சாலை, எண்ணூா் விரைவு சாலை வழியாக வந்தன.

இந்த லாரிகள் தடையின்றிச் செல்வதற்காக முன்பும், பின்பும் ரோந்து வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்புக்காகச் சென்றன. இந்த லாரிகள் விரைவாகச் செல்வதற்காக சாலைகளில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க