சென்னை புல்ஸ் தொடா் வெற்றி
ஜிஎம்ஆா் ரக்பி ப்ரீமியா் லீக் தொடரில் சென்னை புல்ஸ் அணி 31-24 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூா் பிரேவ் ஹாா்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
மும்பை அந்தேரி விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை இரு அணிகளும் மோதின. இதில் சென்னை அணியின் ஜோஸவோ டலகோலா முதல் புள்ளியை ஈட்டினாா். சென்னை அணியின் ஆதிக்கம் சிறிது நேரமே நீடித்த நிலையில் பெங்களூா் அணியினா் சிறப்பாக ஆடி 17 புள்ளிகள் முன்னிலை பெற்றனா். இடைவேளையின்போது பிரேவ் ஹாா்ட்ஸ் 24-7 என முன்னிலை பெற்றிருந்தனா்.
பின்னா் இரண்டாம் பாதியில் சென்னையின் டலகோலா, டொ்ரி கென்னடி சிறப்பாக ஆடி புள்ளிகளை குவித்தனா்.
இறுதியில் 31-24 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை வென்றது.