செய்திகள் :

சென்னை - மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

post image

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது.

இந்த நிலையில், நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்துக்கு திரும்பிவந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, சென்னையில் இருந்து தூத்துக்குடி, ஹைதராபாத், தில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிக்க : ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் இன்று ரத்து!

பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவு ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடைபெற்று முடிந்த மா... மேலும் பார்க்க

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி ஆய்வு

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் ஆய்வு செய்தார்.மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலைக்கு முதல்முறையாக கடந்த ஆண... மேலும் பார்க்க

காதலி வீட்டில் தலித் இளைஞர் தூக்கிட்டு தற்கொலையா? நயினார் நாகேந்திரன் எழுப்பும் கேள்வி!

கன்னியாகுமரியில் காதலியின் வீட்டில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு, மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சி! அமித் ஷா மீண்டும் வருகை?

மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகம் வருகை தரவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ்!

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும் அ... மேலும் பார்க்க

கண்ணாடி பாட்டினுள் விஜய் ஓவியம் !

தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்த நாளை யொட்டி கண்ணாடி பாட்டிலின் உள்ளே விஜய்யின் ஓவியத்தை வரைந்து ஓவியர் யூஎம்டி ராஜா அசத்தியுள்ளார். ஜூன் 22ஆம் தேதி அன்று, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான வ... மேலும் பார்க்க