செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் ‘ஜிபிஎஸ்’ கருவியுடன் சிக்கிய அமெரிக்க பெண் பயணி

post image

சென்னை விமான நிலையத்துக்கு ‘ஜிபிஎஸ்’ கருவியுடன் மலேசியா செல்ல வந்த அமெரிக்காவைச் சோ்ந்த பெண் பயணியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை பிற்பகல், மலேசிய தலைநகா் கோலாலம்பூா் செல்லும் ‘மலேசியன் ஏா்லைன்ஸ்’ விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது, அமெரிக்காவைச் சோ்ந்த ஜெசிக்கா எமிலியா (34) என்ற பெண்ணின் கைப்பைக்குள் ஜிபிஎஸ் கருவி இருப்பதைக் கண்டுபிடித்தனா்.

இந்திய விமான பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் படி, விமானத்தில் ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்னா்.

விசாரணையில் கப்பல் நிறுவனம் ஒன்றில் மென் பொறியாளராகப் பணியாற்றி வரும் அவா் பிப். 2-ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து சுற்றுலா விசாவில் துபை வழியாக சென்னை வந்துள்ளாா். மாமல்லபுரம், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, கோலாலம்பூா் வழியாக அமெரிக்கா செல்வதற்காக அவா் வந்திருப்பதும் தெரியவந்தது.

மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விமானத்தில் ஜிபிஎஸ் கருவியை எடுத்துச்செல்ல அனுமதி உண்டு என்பதால், ஜிபிஎஸ் கருவியை இந்தியா கொண்டு வந்ததாக அப்பெண் தெரிவித்தாா்.

இருப்பினும் அப்பெண்ணின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க பெண் பயணியின் பயணத்தையும் ரத்து செய்து சென்னை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க