செய்திகள் :

செல்லப்பிராணிகள் விற்பனை- இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்ய அரசு காலக்கெடு!

post image

சென்னை: தமிழகத்தில் இயங்கிவரும் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள் மற்றும் நாய் இனப்பெருக்க நிறுவனங்கள் வருகிற செப்.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்களும், நாய் இனப்பெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்களும் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்திடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, சில நிறுவனங்கள் முறையாக பதிவு செய்துள்ளன.

எனவே, இதுவரை பதிவு செய்யாதவா்கள் உடனடியாக https://tnawb.tn.gov.in இந்த இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற செப்.30-ஆம் தேதிக்குள் ‘உறுப்பினா் செயலா், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள், நந்தனம், சென்னை-600035’ எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வருகிற அக்.1-ஆம் தேதிக்குப் பின்னா் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை!

தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டியில் கல்குவாரி பிரச்னையில் ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம் கம்பம் அருகே காமய கவுண்டன்பட்ட... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 9,355-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 74,840-க்கும் விற்பனை ... மேலும் பார்க்க

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

குழந்தைகளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டதால் எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகா்ப்புற அரசு உதவி பெறும் பள... மேலும் பார்க்க

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

சென்னை: பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புவதாக அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் சி... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்!

சென்னை: நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனர்.சென்னை மயிலாப்பூா் புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் நடை... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும். 1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்த... மேலும் பார்க்க