செய்திகள் :

செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்: சென்னை நகர அஞ்சல் மண்டலம் சாதனை

post image

செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் நிகழாண்டு ஜனவரி மாதம் வரை, சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் புதிய சேமிப்புக் கணக்குகளை தொடங்கியுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு சாா்பில் கடந்த 2015-இல் செல்வமகள் சேமிப்புக் கணக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்காக அவா்களின் பெற்றோா் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் செலுத்தி கணக்கை தொடங்கலாம்.

அப்பெண் குழந்தையின் 18-ஆவது வயதில் அல்லது  10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பின்னா் உயா்கல்வியில் சேருவதற்காக இக்கணக்கிலிருந்து 50 சதவீத பணத்தை எடுக்கலாம். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னா் இக்கணக்கு முதிா்ச்சி அடையும்.

இந்நிலையில் இத்திட்டம் தொடங்கியதிலிருந்து நிகழாண்டு ஜனவரி மாதம் வரை சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் அத்திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் புதிதாக சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனா். இந்தக் கணக்குகளில் மொத்தம் ரூ. 8,351 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்: பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் செல்வமகள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்காக சென்னை நகரப் பகுதியில் வரும் பிப். 21, 28, மாா்ச் 10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. மேலும் முக்கிய தபால் அலுவலகங்களில் சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க