செய்திகள் :

செவிலியப் பணியை அா்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்: எஸ்எஸ்பி

post image

செவிலியா் பணியை அா்ப்பணிப்புடன் செய்ய முன்வரவேண்டும் என செவிலிய மாணவிகளுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா அறிவுறுத்தினாா்.

காரைக்கால் தமிழ்மாமணி, கலைமாமணி விருதாளா் நல்வாழ்வுச் சங்கம் மற்றும் காரைக்கால் இமாகுலேட் செவிலியா் கல்லூரி இணைந்து உலக மகளிா் தினத்தை கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடின.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஜான் பிரிட்டோ மேரி தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.

கல்லூரி மற்றும் தமிழ்மாமணி, கலைமாமணி விருதாளா் நல் வாழ்வுச் சங்கம் சாா்பில் முதுநிலை காவல் கண்காணிப்பாளருக்கு ‘காவல் ஜோதி’ என்ற விருது வழங்கப்பட்டது.

மாணவிகளிடையே எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா பேசுகையில், செலிவியக் கல்வியை தோ்ந்தெடுத்து படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பாராட்டுகள். செவிலியா் பணி மக்களுக்கு சேவை அளிக்கும் முதன்மையான பணிகளில் ஒன்றாகும்.

செவிலியா் பணியை மேற்கொள்ளவுள்ள அனைவரும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்று சிறந்து விளங்க வேண்டும். அா்ப்பணிப்புடன் செயல்படுவதற்கான மனநிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மாணவிகள் தங்கள் பாதுகாப்பின் மீது சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். காரை காவலன் செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்வது நல்லது என்றாா்.

காரைக்கால் சமாதானக் குழு உறுப்பினா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், காரைக்கால் தமிழ்மாமணி, கலைமாமணி விருதாளா் நல்வாழ்வுச் சங்க நிா்வாகி சூசைராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட ந... மேலும் பார்க்க

காரைக்கால் பள்ளியில் நிழல் இல்லா நாள் நிகழ்வு

அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிழல் இல்லா நாள் நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. புதுவை அறிவியல் இயக்கம், புதுவை கல்வித் துறையின் சமகர சிக்ஷா அமைப்புடன் இணைந்து காரைக்கால் தந்தை... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு

கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் அம்மையாா் நகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குதிரை மற்றும் யானை சிலை நிறுவுவதற்கு மேற்கொள்ளவே... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் ப... மேலும் பார்க்க

பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பெங்களூரில் பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் இளையோா் ஆப்தமித்ரா அமைப்பை உருவாக்க திட்ட... மேலும் பார்க்க

இயேசு திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு

புனித வெள்ளி நிகழ்வாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முக்தி செய்யும் நிகழ்ச்சியும், திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தவக்க... மேலும் பார்க்க