செய்திகள் :

சேகர் ரெட்டியின் உறவினர்... போட்டுக்கொடுத்த விஐபி... ED ரேடாரில் சிக்கிய வேலூர் ஹோட்டல் அதிபர்!

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள தொண்டான்துளசி கிராமத்தைச் சேர்ந்தவர் மேத்தாகிரி ரெட்டி என்கிற மேத்தா கிரிதரன்.

பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் உறவினரான மேத்தாகிரி `சாய் சுப்ரபாதம்’ என்கிற சைவ ஹோட்டல்களின் அதிபராகவும் இருக்கிறார்.

வேலூரில் சி.எம்.சி மருத்துவமனை அவுட் கேட் அருகிலும், வாணியம்பாடி அருகே சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையிலும் இவரின் ஹோட்டல்கள் அமைந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு, வேலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறத்திலும் சாய் சுப்ரபாதம் கஃபே ஷாப்பையும் திறந்திருக்கிறார் மேத்தாகிரி.

அதுமட்டுமல்லாமல், `வேலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்கம்’ என்கிற சங்கத்திலும் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக மேத்தாகிரி இருந்துவருகிறார்.

மேத்தாகிரி ரெட்டி
மேத்தாகிரி ரெட்டி

சேகர்ரெட்டியின் உறவினர், ஊர்க்காரர் எனக் காட்டிக்கொள்ளும் மேத்தாகிரி அனைத்துக் கட்சியினரிடமும் நட்பு பாராட்டினாலும், தி.மு.க அனுதாபியாகவே தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார்.

இந்நிலையில்தான் அமலாக்கத்துறையின் ரேடாரில் சிக்கியிருக்கிறார் மேத்தாகிரி. அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் நேற்று (மே 6) விடியற்காலை தொண்டான்துளசி கிராமத்திலிருக்கும் மேத்தாகிரியின் வீட்டுக்குச் சென்றனர்.

காலை 6.30 மணிக்கு வீட்டுக்குள் சென்று சோதனையைத் தொடங்கிய அமலாக்கத்துறையினர், மேத்தாகிரி பயன்படுத்தும் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களையும் ஆய்வுசெய்தனர்.

பணப்பரிவர்த்தனை டீலிங் தொடர்பாக அமலாக்கத்துறையினருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன.

சொத்துகள், நகைகள், அவை வாங்கப்பட்ட விபரங்களையும் அலசியிருக்கின்றனர். சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்தச் சோதனை மாலை 5 மணியளவில் நிறைவுற்றது.

வருவாய்க் கணக்குத் தாக்கல் செய்யப்படாத சில ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி எடுத்துச்சென்றதாகவும் தெரியவருகிறது.

சேகர் ரெட்டி
சேகர் ரெட்டி

இந்தச் சோதனையின் பின்னணி குறித்துப் பேசுகிற வேலூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சிலர், "வேலூரில் ஹோட்டல் பிசினஸில் கோலோச்சும் பிரபல வி.ஐ.பி ஒருவர்தான் அமலாக்கத்துறையினரிடம் தன்னைப் போட்டுக் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறது மேத்தாகிரி தரப்பு.

காரணம், அந்த வி.ஐ.பி-யும் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தச் சாதி சங்கத்தில் கௌரவத் தலைவராகவும் இருப்பவர்.

மேத்தாகிரியின் வளர்ச்சியை விரும்பாத அந்த வி.ஐ.பி தொடர்ச்சியான நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

அந்த வி.ஐ.பி குழுமத்துக்குச் சொந்தமான ஹோட்டல்கள் மட்டுமே வேலூரை ஆக்கிரமித்திருக்கின்றன. மற்றவர்களின் வளர்ச்சியை அவர் எப்போதுமே விரும்புவதில்லை. போட்டியாளர்களை வீழ்த்த அவர் எந்த எல்லைக்கும் சென்று குடைச்சல் கொடுப்பார்’’ என்கின்றனர் புலம்பியவாறு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

India - Pakistan Conflict: 'இன்னும் ஏன் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை?' - விளக்கம் சசி தரூர்

பாகிஸ்தானும் சீனாவும் கூட்டாளிகள் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்றத்தில் சீனா பெரிதாக மூக்கை நுழைக்கவில்லை. 'போர் வேண்டாம்... பதற்ற நிலை வேண்டாம்' ... மேலும் பார்க்க

India - Pakistan Conflict: ``எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" - அமெரிக்க துணை அதிபர் பேட்டி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் ஜம்மு, பதா... மேலும் பார்க்க

India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொடுத்த தக்க பதிலடி!

இந்தியா மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான். ஆனால், அந்த ஏவுகணைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துள்ளது இந்திய ராணுவம்.நேற்று இரவு, ஜம்முவின் எல்லைகளான சத்வாரி, சம்பா, ஆர்.எஸ். புரா, ஆ... மேலும் பார்க்க

நள்ளிரவில் களமிறங்கிய கடற்படை... டார்கெட் செய்யப்பட்ட கராச்சி துறைமுகம்!

கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நேற்று முன்தினம் (மே 7) 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.இந்தத் திட்டம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

Jaishankar: 'துல்லியமான பதிலடி' - உலக நாடுகளின் பிரதிநிதிகளுடன் உரையாடிய ஜெய்சங்கர்

இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துவரும் சூழலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் உடனான உர... மேலும் பார்க்க

உள்நாட்டிலும் மிகப்பெரிய தாக்குதல்; இருமுனை தாக்குதலால் தடுமாறும் பாகிஸ்தான்!

தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகவும் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது.இந்தியாவும், பாகிஸ்தானும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி வரும் இந்த வேளையில், பாகிஸ்தானின் உள்நாட்டிற்குள்ளேயே பெரிய சிக்கல் எழ... மேலும் பார்க்க