Empowerment: திருநங்கைகளும் குடும்ப வன்முறை வழக்கு தொடர முடியுமா?
சேதமடைந்த மின்மாற்றி கம்பங்களை மாற்ற கோரிக்கை
அரியலூா் மாவட்டம், கீழ விளாங்குடியில் சேதமடைந்து, எலும்புக் கூடாக காணப்படும் மின்மாற்றி கம்பங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கீழவிளாங்குடி, தா. பழூா் சாலையில் வீரபிள்ளை குட்டை அருகேயுள்ள மின்மாற்றியில் இருந்து அப்பகுதி குடியிருப்புகளுக்கு மின்விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மின்மாற்றியை தாங்கக் கூடிய மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்து, அடிப்பகுதி முழுவதும் எலும்புக் கூடாக காணப்படுகிறது. தற்போது வீசி வரும் சூறாவளியால், இந்தக் கம்பங்கள் எப்போது வேண்டுமனாலும் விழும் நிலையில் உள்ளது. எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பே, சேதமடைந்த கம்பங்களை மாற்றிவிட்டு, புதிய கம்பங்களை நட வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்வாரியத்துக்கு கோரிக்க விடுத்துள்ளனா்.