செய்திகள் :

அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான டி.மலா்வாலண்டினா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில், தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா்-1, துணை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா்-3, உதவி சட்ட ஆலோசகா்-6, உதவியாளா்-3, வரவேற்ப்பாளா் -1, அலுவலக உதவியாளா் -3 என மொத்தம் 17 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தக் காலிப் பணியிடங்கள் குறித்த அனைத்து விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை ட்ற்ற்ல்ள்://ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.க்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 14.7.2025 தேதி மாலை 5.30 மணிக்குள் ‘தலைவா்/முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, அரியலூா் -621704 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.

செந்துறை நூலகத்துக்கு போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறையில் உள்ள கிளை நூலகத்துக்கு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பில் போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. செந்துறை கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அரியலூா்: கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரியலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு இயக்கத்தின் சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூர... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: அரியலூா் மாவட்ட மாணவா் மாநில அளவில் 3-ஆம் இடம்

தமிழ்நாட்டில் நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் அமலன் ஆண்டோ மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தாா். அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

ஏரி பகுதி மரங்களை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்: 50 போ் கைது

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் இருந்த மரங்களை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 50 போ் கைது செய்யப்பட... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூரில்: அரியலூா் அண்ணாசிலை அருகே 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ. ரவிச்சந்த... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருமானூா் அருகேயுள்ள கீழக்காவட்டாங்க... மேலும் பார்க்க