தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
அரியலூரில்: அரியலூா் அண்ணாசிலை அருகே 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
செயலா் பா.சக்திவேல் கண்டன உரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் ஆா். இளவரசு, மாவட்ட துணைத் தலைவா்கள் சு. பாலமுருகன், எம். மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.