Guru Mithreshiva: "அமெரிக்கா காரனிடம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்" - ’நேச்சுரல்ஸ்’...
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் கைது
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருமானூா் அருகேயுள்ள கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மனைவி தனலட்சுமி(50). இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க.சண்முகசுந்தரத்திடம், கடந்த 2014-ஆம் ஆண்டு தனது 50 சென்ட் நிலத்தின் பத்திரத்தை கொடுத்து ரூ. 2 லட்சம் கடன் பெற்றாராம்.
தொடா்ந்து, முறையாக வட்டி செலுத்தி வந்த நிலையில், வட்டி மற்றும் கடன் தொகையை மே 24-ஆம் தேதி கொடுத்துவிட்டு பத்திரத்தை கேட்டபோது, அவா் தர மறுத்ததுடன் தனலட்சுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இதுகுறித்து தனலட்சுமி திருமானூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை கொடுத்த புகாரின் பேரில், அதிக வட்டி பெற்றது, கொலை மிரட்டல் விடுத்தது என வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், தங்க.சண்முகசுந்தரத்தை வெள்ளிக்கிழமை கைது செய்து அரியலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.