செய்திகள் :

அரியலூா்: கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

post image

அரியலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு இயக்கத்தின் சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா்(பொ) பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் காவல் ஆய்வாளா் ஆ. சித்ரா கலந்து கொண்டு பேசுகையில், படிக்கும் மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல், நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொண்டு, வீட்டுக்கும், சமுதாயத்துக்கு நற்பெயரை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக கல்லூரி நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. முன்னதாக, முனைவா் கி. பழனிசாமி வரவேற்றாா். நிறைவில், முனைவா் சு. சுமதி நன்றி கூறினாா்.

கீழப்பழுவூரில்: அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் விநாயகா கல்வி நிறுவனம் சாா்பில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழப்பழுவூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கல்வி நிறுவனத்தின் தாளாளா் சி.பாஸ்கா், காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் ஆகியோா், போதைப் பொருள்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து விளக்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

பேரணியானது, திருச்சி சாலை வழியாகச் சென்று, சீனிவாச நகரில் முடிவடைந்தது. பேரணியில் விநாயகா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி மாணவிகள், கல்வியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணா்வு வாசக அட்டைகளை கையில் ஏந்தி, முழக்கமிட்டவாறு சென்றனா்.

காவல் உதவி ஆய்வாளா்கள் செல்வராஜ், பூமிவேல், அன்பழகன், செல்வகுமாா், தலைமைக் காவலா் அறிவேந்தன், அழகேசன், செந்தில்குமாா் மற்றும் கல்வியில் கல்லூரி முதல்வா் ம.மாலதி மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான டி.மலா்வாலண்டினா தெரிவித்துள்... மேலும் பார்க்க

செந்துறை நூலகத்துக்கு போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறையில் உள்ள கிளை நூலகத்துக்கு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பில் போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. செந்துறை கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: அரியலூா் மாவட்ட மாணவா் மாநில அளவில் 3-ஆம் இடம்

தமிழ்நாட்டில் நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் அமலன் ஆண்டோ மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தாா். அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

ஏரி பகுதி மரங்களை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்: 50 போ் கைது

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் இருந்த மரங்களை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 50 போ் கைது செய்யப்பட... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூரில்: அரியலூா் அண்ணாசிலை அருகே 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ. ரவிச்சந்த... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருமானூா் அருகேயுள்ள கீழக்காவட்டாங்க... மேலும் பார்க்க