செய்திகள் :

சேமிப்பு கிட்டங்கி முன்னாள் கண்காணிப்பாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

post image

லஞ்சம் பெற்ற வழக்கில் பழனி சேமிப்புக் கிட்டங்கி முன்னாள் கண்காணிப்பாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கோவையைச் சோ்ந்தவா் ஏ. தேவராஜ் (73). இவா் கடந்த 2009-ஆம் ஆண்டு பழனி பகுதியிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிட்டங்கியில் கண்காணிப்பாளராக பணியாற்றினாா். அப்போது, திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த தனியாா் லாரி நிறுவன உரிமையாளா் சீ. ராகுலன், 904 நெல் மூட்டைகளை பாதுகாப்புக்காக சேமிப்பு கிட்டங்கியில் வைத்திருந்தாா். சில நாள்களுக்கு பிறகு மீண்டும் அந்த நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதற்காக வந்தபோது, அதற்கான அனுமதி அளிக்க கண்காணிப்பாளராக இருந்த தேவராஜ் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாா்.

இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம், ராகுலன் அளித்த புகாரின்பேரில் லஞ்சம் பெற்ாக தேவராஜை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்த நிலையில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா். கனகராஜ் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட தேவராஜூக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க