செய்திகள் :

சேலத்தில் விடாமுயற்சி வெளியானது! ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!!

post image

சேலம்: சேலத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'விடாமுயற்சி ’ திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

இயக்குநர் மகிழ் திருவேணி இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகைகளில் வெளியாகாமல் தற்போது வெளியானது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அஜித் நடித்து வெளிவந்த 'விடாமுயற்சி ’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'விடாமுயற்சி ’ வியாழக்கிழமை வெளியானது. சேலம் மாநகரில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியானது.

சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும் விடாமுயற்சி வெளியானதை கொண்டாடினர்.

இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி: திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு!

நீண்ட நாட்கள் கழித்து திரைப்படம் வெளியானாலும் அஜித் மற்ற படங்களைவிட விடாமுயற்சி படத்திற்கு கூட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. ஆரம்பம் முதல் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது எனவும் விடாமுயற்சி படத்தில் அஜித்-திரிஷாவின் காதல் காட்சிகள் ரசிகர் மத்தியில் பேசப்படுகிறது.

அஜித் படத்திற்கு எப்போதும் திரையரங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால் 'விடாமுயற்சி ’ திரையிடப்பட்ட திரையரங்குகளில்

கூட்டம் குறைவாக இருந்தது. பல திரையரங்குகளில் நூற்றுக்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்படாமலே இருந்துள்ளது.

இருப்பினும், நீண்ட நாள்களுக்குப் பிறகு அஜித் படம் வெளியான மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆங்காங்கே தங்களது மகிழ்ச்சியை பகிரும் வகையில் கேக் வெட்டி இணைப்பில் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

சமூகநீதி வேடம் கலைகிறது! தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? - விஜய்

ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது என திமுக அரசை குற்றம்சாட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.பிகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான நம் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்: மு.க.ஸ்டாலின்

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகரில் தில்லியில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

பயிர் கடன் தள்ளுபடி எப்போது?: அண்ணாமலை கேள்வி

2021 தேர்தல் பிரசாரத்தின்போது ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி என்று வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், முதல்வராகி நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்று வர... மேலும் பார்க்க

காலை உணவில் பல்லி: 14 மாணவ,மாணவிகளுக்கு சிகிச்சை

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அடுத்த நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை காலை (பிப்.6) மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட காலைசிற்றுண்டியில் பல்லி இறந்து கிடந்தை பாா்க்காமல் சாப்பிட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது!: ராமதாஸ் வலியுறுத்தல்

நாராயணசாமி நாயுடு புகழை மேலும், மேலும் பரப்ப வேண்டிய காலத்தில் அவரது சிலையை அகற்றி வேறிடத்தில் வைக்க முயல்வது நியாயமல்ல. இந்த முயற்சியை பெரம்பலூர் நகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என பாமக நிற... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.திண்டிவனம் அருகிலுள... மேலும் பார்க்க