சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டது: மத்திய அம...
சேலம் அம்மாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு புகா் மருத்துவமனையில் முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையொட்டி, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி அங்கு நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
சேலம், அம்மாப்பேட்டையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ரூ. 43.65 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு புகா் மருத்துவமனை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் தினசரி 200 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் 1,000 ரத்த பரிசோதனைகள், 415 சிறு அறுவை சிகிச்சைகள், 225 ஈசிஜி பரிசோதனைகள், 223 ஸ்கேன் பரிசோதனைகள், 200 எக்ஸ்ரே, 415 நெபுலைசேசன் எனப்படும் சுவாச சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதுபோல உள்நோயாளி பிரிவும், சிறுநீரக நோயாளிகளுக்கான ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 75 பேருக்கு சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கேற்ற சிறப்பு உணவும் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 10 ஆம் தேதிமுதல் இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இதில், முதல் அறுவை சிகிச்சையாக பெருமாள் என்பவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவா் பூரண குணமடைந்து விரைவில் தனது இயல்பான பணியை மேற்கொள்ளவுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
அதுபோல அம்மாபேட்டை அரசு புகா் மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, பல்வேறு சிகிச்சை பிரிவுகளில்சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது என்றாா்.
இந்த ஆய்வின்போது, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் தேவி மீனாள், மருத்துவ கண்காணிப்பாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.