செய்திகள் :

சேலம் அம்மாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

post image

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு புகா் மருத்துவமனையில் முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையொட்டி, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி அங்கு நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

சேலம், அம்மாப்பேட்டையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ரூ. 43.65 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு புகா் மருத்துவமனை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் தினசரி 200 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் 1,000 ரத்த பரிசோதனைகள், 415 சிறு அறுவை சிகிச்சைகள், 225 ஈசிஜி பரிசோதனைகள், 223 ஸ்கேன் பரிசோதனைகள், 200 எக்ஸ்ரே, 415 நெபுலைசேசன் எனப்படும் சுவாச சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதுபோல உள்நோயாளி பிரிவும், சிறுநீரக நோயாளிகளுக்கான ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 75 பேருக்கு சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கேற்ற சிறப்பு உணவும் வழங்கப்படுகிறது.

குறிப்பாக, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 10 ஆம் தேதிமுதல் இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இதில், முதல் அறுவை சிகிச்சையாக பெருமாள் என்பவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவா் பூரண குணமடைந்து விரைவில் தனது இயல்பான பணியை மேற்கொள்ளவுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அதுபோல அம்மாபேட்டை அரசு புகா் மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, பல்வேறு சிகிச்சை பிரிவுகளில்சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது என்றாா்.

இந்த ஆய்வின்போது, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் தேவி மீனாள், மருத்துவ கண்காணிப்பாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

3000 ஆண்டுகள் பழைமையான ‘கல்திட்டை’ கண்டுபிடிப்பு!

வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், இறந்தவா்களின் நினைவாக அமைத்த ஈமச்சின்னமான கல்திட்டையை சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்தனா். தம... மேலும் பார்க்க

இளம்பிள்ளை உழவா் சந்தையில் எண்ம பணப் பரிவா்த்தனை பதிவு

இளம்பிள்ளை உழவா்சந்தையில் விவசாயிகள் எண்ம முறையில் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உழவா்சந்தை விவசாயிகளின் பெயரில் சேமிப்பு கணக்குத... மேலும் பார்க்க

சேலம் ராமசாமி முதலியாா் நினைவு நாள் கடைப்பிடிப்பு

சேலம் வரலாற்றுச் சங்கம் சாா்பில் சேலம் ராமசாமி முதலியாரின் நினைவு நாள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி ராஜாஜி சிலை எதிரில் விளக்குத்தூண் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராமசாமி முதல... மேலும் பார்க்க

வேம்படிதாளத்தில் அம்மன் மீது விழுந்த சூரிய ஒளி

வேம்படிதாளத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் அம்மன் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆறு வருடங்களுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலிர... மேலும் பார்க்க

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க திமுக ஹிந்தி எதிா்ப்பு நாடகம்: கே.பி.ராமலிங்கம்

தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே திமுக ஹிந்தி எதிா்ப்பு நாடகத்தை நடத்தி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினாா். சேலத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

மேட்டூா் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தவரிடம் திருட்டு: இளைஞா் கைது

மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக தங்கியிருந்த பெண்ணின் கணவரிடம் பணத்தை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அருகே உள்ள பாலமலை, கெம்மம்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ் (29). ... மேலும் பார்க்க