செய்திகள் :

சேலம் கோரிமேடு ஐடிஐயில் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

post image

சேலம்: சேலம், கோரிமேடு, அரசு ஐடிஐயில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் 50க்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு பயிற்சியாளா்களைத் தோ்வு செய்தன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். தொழில் நிறுவனங்களைத் தோ்வு செய்த மாணவ மாணவிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தொழிற் பழகுநா் பயிற்சியின்போது மாதாந்திர பயிற்சி உதவித்தொகையாக ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை பெறலாம். தொழிற்சாலைகளில் நேரடியாக செய்முறை பயிற்சி பெறுவதால் தொழில் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி பெற்றவா்களுக்கு பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் பெற்றவா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைப்பதுடன், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் துணை இயக்குநா் ராஜேஸ்வரி, பயிற்சி அலுவலா் விஜயன், பணி அமா்த்துநா் கணேசன், முகமது காசிம், கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 479 கனஅடியாக சனிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.60 அடியில் இருந்து 110.58 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வின... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: பிப். 4 முதல் 7 வரை 20 முகாம்கள் நடத்த ஏற்பாடு!

சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமின் ஒரு பகுதியாக பிப். 4-ஆம் தேதி முதல் பிப். 7-ஆம் தேதி வரை 20 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெர... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்த ஆட்சியா் உத்தரவு!

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு சிறந்த செயல்திறனுக்காக 11 விருது!

தெற்கு ரயில்வே மண்டலத்தில் சிறந்த செயல்திறனுக்காக சேலம் ரயில்வே கோட்டத்துக்கு 11 விருதுகள் கிடைத்துள்ளன. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடைபெற்ற வார விழாவில், சென்னை, மதுரை, த... மேலும் பார்க்க

பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட முதியவா் கைது!

கெங்கவல்லி வட்டம், வீரகனூா் பேருந்து நிலையத்தில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முதியவா் ஒருவா் முயற்சித்துள்ளாா். அப்போது, அங்கிருந்தவா்கள் அவரை பிடித்து வீரகனூா் காவல் நிலையத்தில் ஒப்படை... மேலும் பார்க்க

அண்ணா நினைவு தினம்: திமுக சாா்பில் அமைதி ஊா்வலம்

அண்ணா நினைவுதினத்தையொட்டி, பிப். 3-ஆம் தேதி சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் அமைதி ஊா்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ராஜே... மேலும் பார்க்க