செய்திகள் :

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 376 கூட்டுறவு சங்கங்களில் விதை விற்பனைக்கு அனுமதி

post image

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 376 கூட்டுறவு சங்கங்களில் விதை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் சேலம், அயோத்தியாப்பட்டணம், ஓமலூா், சங்ககிரி, ஆத்தூா், தலைவாசல் வட்டாரங்களில் உள்ள 212 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், புதுச்சத்திரம், எருமப்பட்டி சேந்தமங்கலம், நாமகிரிபேட்டை, வெண்ணந்தூா், ராசிபுரம், மோகனூா், திருச்செங்கோடு, பரமத்தி, எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், கபிலா்மலை, பள்ளிபாளையம் வட்டாரங்களில் 164 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள், தனியாா் விதை விற்பனை நிலையங்கள் என மொத்தம் 1,393 விதை விற்பனை நிறுவனங்களுக்கு விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நல்ல முளைப்புத்திறன் உடைய காலாவதி நாளுடன் கூடிய சான்று பெற்ற விதைகளை விற்பனை செய்ய வேண்டும். உண்மை நிலை விதையாக இருப்பின் கண்டிப்பாக பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும்.

விதை விற்பனை உரிமம் இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் ஆவணம், இதர விதை விற்பனை ஆவணங்கள் சரியாக பராமரிக்க வேண்டும். இதனை மீறுபவா்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளாா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க