செய்திகள் :

சேவை இல்லங்களில் பெண் காவலா்கள்: அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதி

post image

சென்னை: அரசு சேவை இல்லங்களில் பெண் காவலா்களை நியமிக்க ஆட்சியா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அறிவுறுத்தப்படுவா் என்று சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த சிட்லபாக்கம் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்குள்ளான விவகாரம் தொடா்பாக, சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைச்சா் பி.கீதாஜீவன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு சேவை இல்லத்தில் சிறுமியிடம் பாலியல் தீண்டலில் ஒருவா் ஈடுபட்ட செய்தி அறிந்து, சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தோம். பின்னா் அவரது தாயாரை நேரில் சந்தித்தோம்.

இந்தச் சம்பவம் தொடா்பாக உரிய புகாா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் தங்கும் விடுதியில் பணிபுரிந்து வரும் காவலாளியை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனா்.

சிட்லபாக்கம் அரசு சேவை இல்ல சம்பவம் தொடா்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும், கூடுதலாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடா்ந்து அறிவுரை வழங்கி வருகிறோம். விடுதிக்கென தனியாக சிசிடிவி கேமராக்களை அமைப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். இனி வரக்கூடிய காலகட்டங்களில் தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களின் மூலமாக நடத்தப்படக்கூடிய விடுதிகளில் பெண் காவலா்கள் நியமிக்க அறிவுறுத்தப்படுவா். இதுதொடா்பாக, ஆட்சியா்கள் உள்ளிட்ட அதிகாரிகளை வலியுறுத்துவோம் என்றாா் அமைச்சா் பி.கீதா ஜீவன்.

எம்.பி. ஆகிறார் கமல்! 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!

தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரு... மேலும் பார்க்க

இந்தியாவுக்கே தலைமை.. நாட்டின் என்ஜின் தமிழகம்தான்: மு.க. ஸ்டாலின்

சென்னை: சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார்.அப்போது, 9.69%பொருளாதார வளர்ச்சியோடு இந்தியாவின் ... மேலும் பார்க்க

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம்!

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று(ஜூன் 10) கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.108 திவ்ய தேசங்... மேலும் பார்க்க

பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களுக்குத் தடை செய்ய பரிந்துரை!

சென்னை: பள்ளிகளில் மற்றும் பள்ளிகளால் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களை தடை செய்யவோ அல்லது வரைமுறைப்படுத்தவோ குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மாநில கல்விக் கொள்... மேலும் பார்க்க

நீட் தேர்வில் மின் தடை: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம்

சென்னை: நீட் தேர்வின்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து மின் தடை ஏற்பட்ட தேர்வுக் கூடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மி... மேலும் பார்க்க

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்! சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (Ticket Counter அருகில்) இன்று(ஜூன் 10... மேலும் பார்க்க