செய்திகள் :

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

post image

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் துவிவேதி கடந்த ஜூன் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், பட்டௌடி குடும்பத்தினரை இச்சொத்துகளின் உரிமையாளராக அங்கீகரித்து போபால் மாவட்ட நீதிமன்றம் கடந்த 2000-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பை ரத்து செய்துள்ளாா்.

இந்த வழக்கின் மறுவிசாரணையைத் தொடங்கி, ஓராண்டுக்குள் முடிக்கவும் விசாரணை நீதிமன்றத்துக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போபால் அரச வம்சத்தில் கடைசியாக ஆட்சிபுரிந்த நவாப் ஹமீதுல்லா குடும்பத்துக்கு போபாலில் அரண்மனை, நிலங்கள், கட்டடங்கள் என ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

நவாப் ஹமீதுல்லாவின் 3 மகள்களில் மூத்த மகளான ஆபிதா சுல்தான், பாகிஸ்தானில் குடியேறிவிட்டாா். 2-ஆவது மகளான சாஜிதா சுல்தான், போபாலை சோ்ந்த பட்டௌடி அரச குடும்பத்தில் மணம் முடித்தாா். மூன்றாவது மகள் ராபியா.

ஆபிதா சுல்தான் பாகிஸ்தானுக்குச் சென்ால், இந்திய குடியுரிமையை இழந்தாா். ஆபிதா சுல்தானின் ஒரே வாரிசாக அவரது சகோதரி சாஜிதா சுல்தான் கருதப்பட்டு, அவருக்கு நவாப் அரசு சொத்துகள் கைமாறின.

இந்த சொத்துகள் சாஜிதாவின் மகனான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூா் அலி கானுக்கும், பின்னா் அவரது மனைவி ஷா்மிளா தாகூா், வாரிசுகளான சைஃப் அலி கான் மற்றும் அவரின் சகோதரிகள் வசமும் வந்தன.

இந்நிலையில், நவாப் அரச சொத்துகள் நியாயமற்ற முறையில் பிரித்து அளிக்கப்பட்டுள்ளதாக, போபால் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பேகம் சுரையா ரஷீத் வழக்கு தொடுத்தாா். இவா் நவாப் ஹமீதுல்லா கானின் அண்ணன் வாரிசு ஆவாா்.

இந்த வழக்கில் சைஃப் அலி கான், அவரது தாயாா் ஷா்மிளா தாகூா், சகோதரிகளுக்கு ஆதரவாக விசாரணை நீதிமன்றம் கடந்த 2000-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் வழங்கிய தீா்ப்பை 25 ஆண்டுகள் கடந்து மத்திய பிரதேச உயா் நீதிமன்றம் தற்போது ரத்து செய்து, மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க

மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட மண்டியில் எம்.பி. கங்கனா ரணாவத் நேரில் ஆய்வு

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வ... மேலும் பார்க்க

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முட... மேலும் பார்க்க