செய்திகள் :

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

post image

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பீடி என்ற கிராமத்தில் வசித்தவர் டையோக்ஜெரான் சாந்தன் (82). இவர் மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி பிளாவியா (79). இவர்களுக்குக் குழந்தை கிடையாது. இரண்டு பேரும் தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலைக்கு முன்பு இரண்டு பக்கத்திற்குக் கடிதம் எழுதி வைத்திருந்தனர். அக்கடிதத்தில் தங்களது இந்த முடிவுக்கு யாரும் காரணம் கிடையாது என்றும், யாரது தயவிலும் வாழ விரும்பவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அனில் மற்றும் சுமித் ஆகியோர் இத்தம்பதியை ஆன்லைனில் மிரட்டி ரூ.50 லட்சத்தைப் பறித்துள்ளது அவர்களது கடிதத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

உங்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம்கார்டை கொண்டு சட்டவிரோத விளம்பரம் மற்றும் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருப்பதாகச் சாந்தனிடம் இருவரும் மிரட்டியுள்ளனர். 50 லட்சம் ரூபாயையும் கேட்டுள்ளனர்.

அதோடு சாந்தனிடம் இருக்கும் சொத்து விபரங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுள்ளார். அவ்வாறு கூறவில்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார்.

இதனால் சாந்தன் பல்வேறு வழிகளில் ரூ.50 லட்சம் திரட்டி அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார். சாந்தன் தன்னிடம் இருந்த தங்க நகைகளை ரூ.7.15 லட்சத்திற்கு அடமானம் வைத்து அதனையும் அனுப்பி இருக்கிறார்.

மேலும் தனக்குத் தெரிந்த நண்பர்களிடம் கடனும் வாங்கி அனுப்பியதாகக் கடிதத்தில் சாந்தன் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்குப் பணம் அனுப்பிய பிறகும் தொடர்ந்து பணம் கேட்டு சித்ரவதை செய்து கொண்டிருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

arrest

எங்களுக்கு யாரும் ஆதரவு இல்லை. யாரது ஆதரவிலும் வாழவும் விரும்பவில்லை. எனவேதான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்றும், தங்களது உடலை மருத்துவப் பரிசோதனை தேவைக்குக் கொடுத்துவிடும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களின் மொபைல் போனில் இருக்கும் போன் நம்பர்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருப்பூர்: காதலியின் சாவில் மர்மம்; காதலனின் புகாரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா.22 வயதான வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 210 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் கைது; நடந்தது என்ன?

வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, கஞ்சா கும்பலைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்... மேலும் பார்க்க

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' - சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

``கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்" என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.சுபாஷ் சந... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் இழப்பு... கொலைசெய்த கணவனைக் காட்டிக் கொடுத்த அரிவாள் வெட்டு!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவர், கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் ... மேலும் பார்க்க

சென்னை: IPL போட்டியின்போது செல்போன்கள் திருட்டு - ஏஐ தொழில்நுட்பத்தால் இளைஞர்கள் சிக்கியது எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்க... மேலும் பார்க்க

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க