செய்திகள் :

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

post image

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளதாக பிரிடோரியா கேபிடல்ஸ் அணி வீரர் டெவால்டு பிரேவிஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 நான்காவது தொடருக்கான ஏலம் சில நாள்களுக்கு முன்னதாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் வெறும் 22 வயதே ஆன டெவால்டு பிரேவிஸ் 16.5 மில்லியனுக்கு (இந்திய மதிப்பில் ரூ.8.3 கோடிக்கு மேல்) ஏலத்தில் எடுக்கப்பட்டு, எஸ்ஏ20 வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்ற சிறப்பான சாதனையையும் படைத்தார்.

இந்த நிலையில், எம்ஐ கேப்டவுன் அணியில் இருந்து விலகி, சொந்த மண்ணில் செஞ்சூரியனில் (அதாவது பிரிடோரியா) விளையாடுவது குறித்து பேசினார் டெவால்டு பிரேவிஸ்.

இதுகுறித்து டெவால்டு பிரேவிஸ் பேசுகையில், “

நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். நீங்கள் எப்போதும் கடந்து வந்ததை திரும்பி பார்க்க வேண்டும். எம்ஐ அணியில் மூன்று ஆண்டுகள் விளையாடியது சிறப்பாக இருந்தது.

கடந்தாண்டு பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதனை நாங்கள் சரி செய்து சிறப்பாக விளையாடினோம். அதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். ஆனால், இப்போது புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது.

நான் என்னுடைய சொந்த மண்ணில் விளையாடவுள்ளேன். சூப்பர் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் திடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

அங்குதான் நானும் என்னுடைய அண்ணனும் சிறுவயதில் விளையாடியுள்ளோம். இப்போது மீண்டும் அங்கு விளையாடவிருப்பதால் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

அணித் தேர்வு குறித்து பேசுகையில்,

அணித் தேர்வு நன்றாக இருக்கிறது. லுங்கி இங்கிடி இருக்கிறார். வங்கதேசத்தில் தொடங்கிய நட்பு குறித்த நினைவுகள் இருக்கின்றன. லிசாட் வில்லியம்ஸ் இருக்கிறார் மற்றும் உள்ளூர் நண்பர்கள் பலரும் அணியில் இருக்கின்றனர்”.

ரஸ்ஸல், ரூதர்போர்டு உள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரர்கள் இருப்பதாலும், சூப்பர் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் திடல் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாகவும் இருக்கும்” என்றார்.

TO BE WITH PRETORIA CAPITALS, I’M SUPER EXCITED. IT IS MY HOMETOWN” – DEWALD BREVIS

இதையும் படிக்க : கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகியுள்ளார்.ஆஸ்திரேலிய மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரு... மேலும் பார்க்க

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிவேகமாக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மந்தனா இந்த சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான... மேலும் பார்க்க

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக நம்.1 இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு இந்தியா முழுவதும் உள்ள கிரி... மேலும் பார்க்க

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியா, பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

இந்தியாவில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நடுவா்கள் குழுவிலிருந்து ஆண்டி பைகிராஃப்டை நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை, சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை நிரா... மேலும் பார்க்க