செய்திகள் :

சொந்த மண்ணில் 3,211 நாள்களுக்குப் பிறகு சதம்: கே.எல்.ராகுல் புதிய சாதனை!

post image

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் அடித்துள்ளார்.

இந்திய மண்ணில் சுமார் 3,211 நாள்களுக்குப் பிறகு சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் இந்திய அணி, இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை 218/3 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் நிதானமாக விளையாடிவரும் கே.எல்.ராகுல் 192 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

சொந்த மண்ணில் முதலிரண்டு சதங்களுக்கான இடைவெளியில் நீண்ட நாள்கள் எடுத்துக்கொண்ட இந்தியர்களில் கே.எல்.ராகுல் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பாக, ஆர். அஸ்வின் 2,655 நாள்களில் (2013, 2021) தனது சதத்தை அடித்திருந்தார்.

தற்போது, உணவு இடைவேளை வரை 67 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 218/3 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 100, துருவ் ஜுரெல் 14 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.

Indian player KL Rahul has scored a century against the West Indies.

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபா... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே... கே.எல்.ராகுல் கூறுவதென்ன?

டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் கடந்த 11 ஆண்டுகளில் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே அடித்துள்ளது குறித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகு... மேலும் பார்க்க

தனது முதல் சதத்தை இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பித்த துருவ் ஜுரெல்!

டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் விளாசியதை இந்திய ராணுவத்துக்கு இளம் வீரர் துருவ் ஜுரெல் சமர்ப்பித்துள்ளார்.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் நடைபெ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில்... மேலும் பார்க்க

ஆசாத் காஷ்மீரா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா? சர்ச்சையில் சிக்கிய முன்னாள் கேப்டன்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை ஆசாத் காஷ்மீர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சனா மிர் பேசிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற... மேலும் பார்க்க

மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கைவிடப்பட்டது. மழையின் காரணமாக இந்தப் போட்டி 2.1 ஓவர்களில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள... மேலும் பார்க்க