சோனியா காந்திக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை
புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி (78) புது தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் திங்கள்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டாா்.
இரண்டு நாள்களுக்கு முன்பு உயா் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோனியா காந்தி சிகிச்சை பெற்றாா். இந்நிலையில், தற்போது மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ளாா்.
கடந்த பிப்ரவரி மாதமும் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவா்கள் கண்காணிப்பில் சோனியா காந்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.