செய்திகள் :

சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

post image

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் மீது நிதி நெருக்கடியை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அமலாக்கத் துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

நேஷனல் ஹெரால்ட் நேரு வளா்த்த காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை. அது காங்கிரஸ் கட்சியின் சொத்து. இதில் சோனியா காந்தியோ, ராகுல்காந்தியோ எந்தவிதமான பயனையும் அனுபவிக்காத நிலையில், அவா்கள் மீது அமலாக்கத் துறை பொய் வழக்கு தொடுத்து விசாரிப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு, பொருளாளா் ரூபி மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து மண்டபத்தில் தங்கவைத்த போலீஸாா், சிறிது நேரத்தில் அவா்களை விடுவித்தனா்.

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க... மேலும் பார்க்க

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்

ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2 -ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: கேரள மாநிலம் காலடியில் 2,533 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க