செய்திகள் :

``சோழர்கள் வளர்த்த காவித்தமிழ்; ஸ்டாலின் ஏன் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்?'' - தமிழிசை கேள்வி

post image

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவிருக்கிறார். இன்றிரவு தூத்துக்குடி விமான நிலையம் வரவிருக்கும் அவரை வரவேற்க செல்கையில் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

கங்கைகொண்ட சோழபுரம்

அப்போது அவர் பேசியதாவது, 'வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய நாட்டின் பெருமை. ஆனால், சிலர் இங்கே பிரிவினைவாதம் பேசுகிறார்கள். நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கிறார்கள். இங்கே பெரிய புராணம்தான் பேசப்பட வேண்டும், பெரியார் புராணம் அல்ல. சோழர்கள் ஆன்மிகத்தோடு சேர்த்து தமிழை வளர்த்தார்கள். அதனால்தான் காவித்தமிழ் என்கிறேன்.

சோழகங்கம் ஏரிக்கு தமிழக முதல்வர் 12 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார். பிரதமர் வருகிறார் என்றவுடன்தான் முதலமைச்சரே கங்கைகொண்ட சோழபுரத்தைப் பற்றி சிந்திக்கிறார். தமிழகத்தைப் பற்றி தமிழக முதல்வர் சிந்திப்பதை விட பிரதமர் மோடி அதிகமாக சிந்திக்கிறார்.

பாஜகவைப் பற்றி வீடு வீடாக சென்று சொல்லுங்கள் என ஸ்டாலின் கூறுகிறார். ஆம், நாங்கள் இன்றைக்கு தொடங்கி வைக்கும் திட்டங்களைப் பற்றியும் மக்களிடம் சொல்லுங்கள்.

தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

தனியார் மருத்துவமனையில் உட்காந்துகொண்டு 'உங்களுடன் ஸ்டாலின்' என முதல்வர் பேசிக் கொண்டிருக்கிறார். ஏன், அரசு மருத்துவமனையில் உட்காந்து கொண்டு 'உங்களுடன் ஸ்டாலின்' என பேசலாமே. அரசு மற்றும் தனியார் இரண்டு மருத்துவமனைகளிலுமே ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதானே அரசின் நோக்கம்? செந்தில் பாலாஜியின் சகோதரர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.

மோடி அவர்கள் அரசு மருத்துவமனையில்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலினோ தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். கிட்னி திருட்டை திருட்டல்ல முறைகேடுதான் என சுகாதார அமைச்சர் கூறுகிறார்.

பாலியல் தொந்தரவு, கொலை, கொள்ளை என அத்தனையிலும் திமுக நிர்வாகிகளின் பங்கு இருக்கிறது. பீகாரில் நடந்து கொண்டிருப்பது சீர்திருத்தம். இறந்தவர்களின் பெயரைத்தான் நீக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழகத்திலும் செய்ய வேண்டும்." என்றார்.

கங்கை கொண்ட சோழபுரம்: பிரதமர் மோடி வருகை, இளையராஜா சிம்பொனி இசை.. களைகட்டும் திருவாதிரை விழா!

மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தமிழக அரசு சார்பில் இராஜேந்திர சோழன் திருவாதிரை விழா கொ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: ``ராகுல் காந்திபோல ஸ்டாலின் தவறை உணர்வாரா?'' - அன்புமணி கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பி... மேலும் பார்க்க

``காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது என் தவறுதான்'' - ராகுல் காந்தி சொல்வதென்ன?

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாதது தனது தவறுதான் என்றும் கட்சியின் தவறில்லை என்றும் கூறியுளார். மேலும், தற்போது சாதிவாரி கணக்க... மேலும் பார்க்க

Thailand vs Cambodia: இந்து கோவிலுக்கு உரிமை கொண்டாடுவதுதான் மோதலுக்கு காரணமா? | Explained

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே எழுந்துள்ள மோதலால் தென் கிழக்கு ஆசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால எல்லைப் பிரச்னைகள் திடீரென மோதலாக வெடித்திருக்கிறத... மேலும் பார்க்க

``கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்.. மதுரைக்கு அவப்பெயரை தந்துள்ளது திமுக அரசு..'' - அதிமுக டாக்டர் சரவணன்

தமிழ்நாட்டின் கலை, கலாச்சார தலைநகரமாக மதுரை விளங்குகிறது. அண்மையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட ஸ்வச் சர்வேக்ஷன் 2023 (Swachh Survekshan 2023) தூய்மைப் பட்டியல... மேலும் பார்க்க

Ear Health: காதில் ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்.. - விளக்கும் ENT சிறப்பு மருத்துவர்

ஐம்புலன்களில் ஒன்றான காது, கேட்பதற்கு மட்டுமல்ல... நம் உடலைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காது குறித்த அக்கறையும் அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இந... மேலும் பார்க்க