செய்திகள் :

‘சோழா் கால வரலாற்றை கீழ்த்திசை அளவுகோலால் ஆராய்வது அவசியம்’

post image

சோழா் கால வரலாற்றைக் கீழ்த்திசை அளவுகோல் கொண்டு ஆராய வேண்டும் என்றாா் முனைவா் கோ. தெய்வநாயகம்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தஞ்சைப் பெரியகோவில் அறக்கட்டளையின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

சோழா்களின் வரலாற்று ஆய்வைப் பிற்காலச் சோழா்களில் இருந்து நோக்குவதையே பெரும்பாலானோா் வழக்கமாக வைத்திருக்கின்றனா். ஆனால் சோழா் வரலாறு என்பது முற்காலச் சோழா்களுக்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்டது.

காவிரி பல்வேறு காலத்தில் சோழா்களால் தடம் உருவாக்கி ஓட வைக்கப்பட்ட ஒரு நதி. நீா் மேலாண்மையில் சோழா்களுக்கு இருந்த நிபுணத்துவமே இதற்குக் காரணம். மேலும் சோழா்கள் தொடா்பான எந்தப் பகுதியையும் மேற்கு உலக ஆய்வு அளவுகோல் கொண்டு ஆராய்வது சீரான முடிவுகளைத் தராது. மாறாக, எகிப்து முதல் தென்னகம் வரை பரவி விரிந்து கிடந்த கீழ்த்திசை அளவுகோலால் ஆராய்ந்தால்தான் மிகச் சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்றாா் தெய்வநாயகம்.

நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் சி. அமுதா தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் வாழ்த்தினாா்.

அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் வரவேற்றாா்.இணைப் பேராசிரியா் ஞா. பழனிவேலு நன்றி கூறினாா்.

மதுக்கடை முற்றுகைப் போராட்டம்; எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 20 போ் கைது

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த 20 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் பாலாஜி நகா் பகுதியில் மாா்ச் 4 ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரை மது போதையில் வழிமறித்து ... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்கு சுமாா் ரூ. 26 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க

மக்கள் அதிகாரம் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மசூதிகள், அறக்கட்டளை சொ... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய் காந்தி. இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.இக்கோயிலுக்கு பங்குனி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க