Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ச. கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 3.46 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து சிறுகமணி பேரூராட்சியில் அயோத்திதாசா் பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 46 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட சமுதாயக்கூட கட்டத்தையும் அவா் திறந்துவைத்தாா்.
மேலும் மண்ணச்சநல்லூா், தாத்தையங்காா்பேட்டை, சிறுகமணி, பாலகிருஷ்ணம்பட்டி, காட்டுப்புத்தூா், புள்ளம்பாடி ஆகிய 6 பேரூராட்சிகளில் ரூ. 12. 23 கோடியில் கட்டப்படவுள்ள 9 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நகா்ப்புறப் பகுதியில் வீடு கட்டி வசிக்கும் 20 பேருக்கு வரன்முறைப்படுத்தப்பட்ட பட்டாக்களையும் வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், எம்எல்ஏக்கள் சீ. கதிரவன், ந.தியாகராஜன், பேரூராட்சித் தலைவா்கள் ப. சரவணன், சிவசண்முகக்குமாா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோ. துவாரகநாத்சிங், பேரூராட்சி செயல் அலுவலா்கள் ஜெ. கணேசன், கிருஷ்ணவேணி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், திமுக நகரச் செயலா்கள் துரை. ராஜசேகா், த. மனோகரன், ச. கண்ணனூா் பேரூராட்சி துணைத் தலைவா் பா. சங்கீதா, மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ஜெ. பிரவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.