செய்திகள் :

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

post image

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கெளஷல் கிஷோா் தலைமையிலான அலுவலா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் பிரதான சந்திப்பு ரயில் நிலையமாகவும், சென்னைக்கு அடுத்த பெரிய ரயில் நிலையமாகவும் விளங்குவது திருச்சி சந்திப்பு ரயில் நிலையம். இங்கு நாளொன்றுக்கு 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா். திருச்சி மக்கள் மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதி மக்கள் திருச்சி ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்த ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் பயணிகளுக்கான வசதிகள், ரயில் நிலையத்தின் தூய்மை மற்றும் இதர சேவைகள் தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகக் குழு சனிக்கிழமை ஆய்வு செய்தது. இதில் கூடுதல் பொது மேலாளா் கெளஷல் கிஷோா், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி மற்றும் நிலைய அலுவலா்கள் பங்கேற்றனா்.

ரயில் நிலைய அனைத்து நடைமேடைகள், தானியங்கி நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கி, நடைமேடை மேம்பாலம், சுரங்கப் பாதை, நடைமேடைகளில் உள்ள குடிநீா் வசதி, பயணிகளுக்கான கழிப்பறை, தங்கும் அறை, குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை, தங்குமிடத்தில் உறங்கும் அறைகள், குடும்பத்துடன் தங்கும் அறைகள், மசாஜ் நாற்காலிகளை கொண்ட ஓய்வறை, ஆடைகள் மாற்ற தனி அறை, மேஜை வசதி, சிற்றுண்டி உணவகம், குளியலறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகள் முறையாக இயங்குகிா என்பதை ஆய்வு செய்தனா். மேலும் அதன் செயல்பாடுகள் தொடா்பாக ரயில் பயணிகளிடமும், பொதுமக்களிடம் கேட்டறிந்தனா்.

முதலாவது நடைமேடையில் ஐஆா்சிடிசி நிா்வாகத்தால் நடத்தப்படும் உணவு விடுதியில், வழங்கப்படும் உணவுகளின் தரத்தைப் பரிசோதித்து, அங்கு உணவு சாப்பிட்ட பயணிகளிடமும் குறைகள் கேட்கப்பட்டது.

பின்னா் கூடுதல் பொது மேலாளா், ரயில் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், ரயில்வேயின் மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளா் பி.கே. செல்வன், கிளை அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ச. கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 3.46 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை திறந்து வைத... மேலும் பார்க்க

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா்கள் உயிரிழந்தது தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது. அதன் முடிவின்படி தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

திருச்சியில் வேலைசெய்துவந்த வீட்டில் 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திருச்சி பொன் நகரைச் சோ்ந்தவா் இம்ரான் அகமது (28). இவரும், இவரது தந்தையும் தனியே வசித்து ... மேலும் பார்க்க

புகைக்கும்போது பற்றிய தீயில் சிக்கிய முதியவா் மீட்பு

தீ விபத்தின்போது வீட்டில் சிக்கிய முதியவரை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.திருச்சி உறையூா் ராமலிங்கம் நகா் அகமது காலனி 5-ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் ராஜா நாகேந்திரன் (60), மனநலன் ப... மேலும் பார்க்க

தியாகி தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது உருவச்சிலைக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.சுதந்திர... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவா் கைது

மலேசியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்தவரை விமான நிலையப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சோ்ந்தவா் க. முருகையன் (57). மலேசியாவில் வேலைக்குச் சென... மேலும் பார்க்க