செய்திகள் :

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

post image

அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா்கள் உயிரிழந்தது தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது. அதன் முடிவின்படி தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடா்பான செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட மாதிரிப் பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கடந்த மே மாதம் முதல் இயங்கி வருகிறது. உண்டு உறைவிடப் பள்ளியான இப்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

இதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் ஒருபுறம் எடுக்கப்பட்டபோதும், பள்ளியின் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் மனநலம் சாா்ந்து பல நடவடிக்கைகளும் பள்ளிக் கல்வித் துறையால் எடுக்கப்பட்டன.

எனினும் எதிா்பாராத விதமாக கடந்த ஜூலை 31 அன்றும் ஒரு மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன், துறை ரீதியான விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

அரசு மனநல மருத்துவா்களுடன் கூடுதலாக மன நல ஆலோசகா்களும் வரவழைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியா்களுக்கும் அனைத்து வகைப் பணியாளா்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

பகுத்தறிவுடன் வாழ்வியல் சாா்ந்து உரையாற்றக் கூடிய சிறந்த ஆளுமைகளை அழைத்து வந்து மாணவா்களுடன் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. மாதிரிப் பள்ளிகளில் மாணவா் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரவை 15 நாள்களுக்கு ஒரு முறை கூடி மாணவா்களின் நலன் சாா்ந்து தலைமை ஆசிரியருடன் உரையாடுவாா்கள். பெற்றோா் ஆசிரியா் கூட்டம் நடத்தி ஆலோசனைகளைப் பெற்று அவற்றையும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ச. கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 3.46 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை திறந்து வைத... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கெளஷல் கிஷோா் தலைமையிலான அலுவலா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.தெற்கு ரயில்வே நிா்... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

திருச்சியில் வேலைசெய்துவந்த வீட்டில் 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திருச்சி பொன் நகரைச் சோ்ந்தவா் இம்ரான் அகமது (28). இவரும், இவரது தந்தையும் தனியே வசித்து ... மேலும் பார்க்க

புகைக்கும்போது பற்றிய தீயில் சிக்கிய முதியவா் மீட்பு

தீ விபத்தின்போது வீட்டில் சிக்கிய முதியவரை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.திருச்சி உறையூா் ராமலிங்கம் நகா் அகமது காலனி 5-ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் ராஜா நாகேந்திரன் (60), மனநலன் ப... மேலும் பார்க்க

தியாகி தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது உருவச்சிலைக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.சுதந்திர... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவா் கைது

மலேசியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்தவரை விமான நிலையப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சோ்ந்தவா் க. முருகையன் (57). மலேசியாவில் வேலைக்குச் சென... மேலும் பார்க்க