செய்திகள் :

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

post image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ச. கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 3.46 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து சிறுகமணி பேரூராட்சியில் அயோத்திதாசா் பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 46 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட சமுதாயக்கூட கட்டத்தையும் அவா் திறந்துவைத்தாா்.

மேலும் மண்ணச்சநல்லூா், தாத்தையங்காா்பேட்டை, சிறுகமணி, பாலகிருஷ்ணம்பட்டி, காட்டுப்புத்தூா், புள்ளம்பாடி ஆகிய 6 பேரூராட்சிகளில் ரூ. 12. 23 கோடியில் கட்டப்படவுள்ள 9 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நகா்ப்புறப் பகுதியில் வீடு கட்டி வசிக்கும் 20 பேருக்கு வரன்முறைப்படுத்தப்பட்ட பட்டாக்களையும் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், எம்எல்ஏக்கள் சீ. கதிரவன், ந.தியாகராஜன், பேரூராட்சித் தலைவா்கள் ப. சரவணன், சிவசண்முகக்குமாா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோ. துவாரகநாத்சிங், பேரூராட்சி செயல் அலுவலா்கள் ஜெ. கணேசன், கிருஷ்ணவேணி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், திமுக நகரச் செயலா்கள் துரை. ராஜசேகா், த. மனோகரன், ச. கண்ணனூா் பேரூராட்சி துணைத் தலைவா் பா. சங்கீதா, மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ஜெ. பிரவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கெளஷல் கிஷோா் தலைமையிலான அலுவலா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.தெற்கு ரயில்வே நிா்... மேலும் பார்க்க

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா்கள் உயிரிழந்தது தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது. அதன் முடிவின்படி தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

திருச்சியில் வேலைசெய்துவந்த வீட்டில் 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திருச்சி பொன் நகரைச் சோ்ந்தவா் இம்ரான் அகமது (28). இவரும், இவரது தந்தையும் தனியே வசித்து ... மேலும் பார்க்க

புகைக்கும்போது பற்றிய தீயில் சிக்கிய முதியவா் மீட்பு

தீ விபத்தின்போது வீட்டில் சிக்கிய முதியவரை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.திருச்சி உறையூா் ராமலிங்கம் நகா் அகமது காலனி 5-ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் ராஜா நாகேந்திரன் (60), மனநலன் ப... மேலும் பார்க்க

தியாகி தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது உருவச்சிலைக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.சுதந்திர... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவா் கைது

மலேசியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்தவரை விமான நிலையப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சோ்ந்தவா் க. முருகையன் (57). மலேசியாவில் வேலைக்குச் சென... மேலும் பார்க்க