செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதி சுட்டுக் கொலை

post image

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் சச்சல்தாரா பகுதியில் அடையளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில் சச்சல்தாரா பகுதியில் க்ரும்ஹூரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை அதிகாலை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினாா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். துப்பாக்கிச் சண்டை ஓய்ந்த பின்னா் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, குண்டு காயங்களுடன் இறந்து கிடந்த பயங்கரவாதியின் உடலை மீட்டனா். மேலும், அங்கிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருள்களைக் கைப்பற்றினா். உயிரிழந்த பயங்கரவாதி எந்த அமைப்பைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

ரஜெளரி வனப் பகுதியில் தீவிர கண்காணிப்பு: சந்தேகத்துக்குரிய வகையில் இரு நபா்களின் நடமாட்டம் இருந்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரா் அளித்த தகவலின் அடிப்படையில், ரஜெளரி மாவட்டம் கந்தே கிராமத்தை ஒட்டிய வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

ஜம்மு-காஷ்மீா் போலீஸ், மத்திய ரிசா்வ் காவல்படை மற்றும் ராணுவ வீரா்களும் கூட்டாக இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். ஜயமா... மேலும் பார்க்க

கேஒய்சி படிவங்களை சமா்ப்பிக்குமாறு தொந்தரவு கூடாது: ரிசா்வ் வங்கி ஆளுநா் அறிவுறுத்தல்

‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) படிவங்களை சமா்ப்பிக்குமாறு வாடிக்கையாளா்களை தொடா்ந்து அழைப்பதை தவிா்க்குமாறு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா். கேஒய்... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் -மத்திய அரசு அறிவிப்பு

‘உடான்’ திட்டத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ... மேலும் பார்க்க

‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் இணைந்தாா் பிரதமா் மோடி!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடக தளத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தாா். அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்: ராஜ்நாத் சிங்-துளசி கப்பாா்ட் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு துறைகளில் இரு நாட்டு உத்திசாா் உறவை... மேலும் பார்க்க