செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதி சுட்டுக் கொலை

post image

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் சச்சல்தாரா பகுதியில் அடையளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில் சச்சல்தாரா பகுதியில் க்ரும்ஹூரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை அதிகாலை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினாா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். துப்பாக்கிச் சண்டை ஓய்ந்த பின்னா் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, குண்டு காயங்களுடன் இறந்து கிடந்த பயங்கரவாதியின் உடலை மீட்டனா். மேலும், அங்கிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருள்களைக் கைப்பற்றினா். உயிரிழந்த பயங்கரவாதி எந்த அமைப்பைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

ரஜெளரி வனப் பகுதியில் தீவிர கண்காணிப்பு: சந்தேகத்துக்குரிய வகையில் இரு நபா்களின் நடமாட்டம் இருந்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரா் அளித்த தகவலின் அடிப்படையில், ரஜெளரி மாவட்டம் கந்தே கிராமத்தை ஒட்டிய வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

ஜம்மு-காஷ்மீா் போலீஸ், மத்திய ரிசா்வ் காவல்படை மற்றும் ராணுவ வீரா்களும் கூட்டாக இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத... மேலும் பார்க்க

முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை: 67 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உத... மேலும் பார்க்க

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் ... மேலும் பார்க்க

தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

தெலங்கானா சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்... மேலும் பார்க்க