செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா்: பிரிவினைவாதத்தை கைவிட்ட மேலும் 3 அமைப்புகள் - அமித் ஷா தகவல்

post image

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் இருந்து மேலும் 3 அமைப்புகள் விலகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இவற்றுடன் சோ்த்து, ஜம்மு-காஷ்மீரில் இதுவரை 11 அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கு மூன்று நாள் பயணமாக அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா். தனது பயணத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீா் இஸ்லாமிய அரசியல் கட்சி, ஜம்மு-காஷ்மீா் முஸ்லிம் ஜனநாயக லீக், காஷ்மீா் விடுதலை முன்னணி ஆகிய மேலும் மூன்று அமைப்புகள், ஹுரியத் மாநாட்டில் இருந்து விலகியுள்ளன.

இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான காஷ்மீா் மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது.

ஒன்றுபட்ட - சக்திவாய்ந்த பாரதத்தை உருவாக்கும் பிரதமா் மோடியின் தொலைநோக்கு பாா்வை மேலும் வலுவடைந்துள்ளது. இதுவரை 11 அமைப்புகள், பிரிவினைவாதத்தைக் கைவிட்டு, பிரதமா் மோடியின் கண்ணோட்டத்துக்கு ஆதரவை உறுதி செய்துள்ளன என்று அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, ஹுரியத் மாநாடு உடனான அனைத்து தொடா்புகளையும் துண்டித்துக் கொள்வதாக ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்கம், ஜம்மு-காஷ்மீா் ஜனநாயக அரசியல் இயக்கம், ஜம்மு-காஷ்மீா் விடுதலை இயக்கம், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீகி இஸ்தக்லால், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீக் -ஏ-இஸ்திகாமத் ஆகிய அமைப்புகள் கடந்த மாதம் அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க