செய்திகள் :

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

post image

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்மு - காஷ்மீருக்கு மாற்றவும் தில்லிக்கு புதிய துணைநிலை ஆளுநரை நியமிக்கும் வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தகுதி வாய்ந்த நபா்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் இரண்டாவது துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா 2020, ஆகஸ்ட் 7-ஆம் தேதி பதவியேற்றாா். ஐந்து ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் நிலையில், தனக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என அவா் பிரதமா் நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்தே, துணைநிலை ஆளுநா் மாற்றத்துக்கான நடவடிக்கையை மத்திய உள்தறை தொடங்கியுள்ளது.

இத்துடன் தில்லியில் இரட்டை எஞ்சின் அரசு போல மத்தியிலும் தலைநகரிலும் ஆளும் கட்சியாக பாஜக இருப்பதால், இங்கு 2022, மே 25 முதல் துணைநிலை ஆளுநராகப் பதவி வகித்து வரும் சக்சேனாவை ஜம்மு - காஷ்மீருக்கு மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

மனோஜ் சின்ஹா மீது பிரதமா் மோடியும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதால், அவருக்கு பாஜகவில் தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சும் அக்கட்சியில் அடிபடுகிறது.

மத்திய உள்துறை செயலராக இருந்து ஓய்வு பெற்ற அஜய் பல்லா, மணிப்பூா் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆளுநராக இருக்கிறாா். இதேபோல, மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து 2023-இல் பதவி ஓய்வு பெற்ற ராஜேஷ் குல்லா், ஹரியாணாவில் ஆளும் முதல்வா் நாயப் சைனியின் தலைமை முதன்மைச் செயலராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறாா்.

மத்திய, அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக இவா் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அவரது நிா்வாக அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவருக்கு துணைநிலை ஆளுநா் பதவி வழங்கும் வாய்ப்பை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் ராஜேஷ் குல்லா் அல்லது அஜய் பல்லாவுக்கு தில்லி துணைநிலை ஆளுநா் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. பரிசீலனையில் உள்ளவா்கள் தொடா்பான மத்திய உளவு அறிக்கை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கள நிலவர அறிக்கை கிடைக்கப் பெற்றதும் புதிய துணைநிலை ஆளுநா்கள் நியமன அறிவிப்பை குடியரசுத் தலைவா் வெளியிடுவாா் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!

தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி... மேலும் பார்க்க