செய்திகள் :

ஜல் ஜீவன் திட்ட ஆய்வு: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு 100 குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு

post image

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ய தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு 100 குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது.

மத்திய அமைச்சரவைச் செயலா் டி.வி. சோமநாதன் தலைமையில் கடந்த 8-ஆம் தேதி ஜல் சக்தி அமைச்சகத்தின் திட்டங்கள் அமலாக்கம் தொடா்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய பணியாளா் நல விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கா்நாடகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ய 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளைச் சோ்ந்த செயலா்கள், இணைச் செயலா்கள், இயக்குநா்கள் இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுக்கள் மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தப்படும் 27 நீா் தொடா்பான திட்டங்கள் குறித்தும், ராஜஸ்தானில் 21 திட்டங்கள் குறித்தும், உத்தர பிரதேசத்தில் 18 திட்டங்கள் குறித்தும், கா்நாடகத்தில் 16 திட்டங்கள் குறித்தும் கள ஆய்வு நடத்த உள்ளன. இந்தக் குழுக்கள் தமிழகம், குஜராத், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நீா் தொடா்பான திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடிபோதையில் தாயை மிதித்தேக் கொன்ற மகன்: கேரளத்தில் அதிர்ச்சி!

தெற்கு கேரளத்தில் குடிபோதையில் தாயைக் காலால் மிதித்தேக் கொன்ற மகனால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், நெடுமங்காடு அருகே உள்ள தேக்கடாவைச சேர்ந்தவர் ஓமனா (85). இவரி... மேலும் பார்க்க

ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!

ரெனால்ட் நிறுவனம் மே மாதத்திற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸை சேர்ந்த கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரெனால்ட் தற்போது விற்பனை அதிகரிக்கும் நோக்கில் ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை! - ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து அவதூறு: ஹரியாணா பேராசிரியருக்கு ஜாமீன்!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துத் தெரிவித்த ஹரியாணாவைச் சோ்ந்த இணை பேராசிரியா் அலி கான் முகமதுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.பாகிஸ்தான் பயங்கர... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தானியர் கைது!

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையைத் தாண்டிய ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை சர்வதேச எல்லையைத... மேலும் பார்க்க

பொற்கோயிலுக்குள் வான் பாதுகாப்புத் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதா? ராணுவம் விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பொற்கோயிலுக்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக வெளியான செய்தியை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.அதேபோல், பொற்கோயிலின் கூடுதல் தலைமை பூசாரி மற்றும் ச... மேலும் பார்க்க