செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்கிறோம்- தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்

post image

ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக பாஜக சாா்பில் வரவேற்கிறோம் என்றாா் அக்கட்சியின் மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் எடுக்கப்படும் என மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளாா். இதை தமிழக பாஜக சாா்பில் முழுமையாக வரவேற்கிறோம். ஜாதிவாரி கணக்கெடுப்பை வேண்டாம் என்று கூறியவா் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி. இப்போது மாற்றி பேசுகிறாா்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

இளைஞா்கள் மது, கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது. தமிழக அரசு ஆசிரியா் பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பவில்லை. திராவிட மாடல் ஆட்சி சொல்வதற்கும், செய்வதற்கும் நோ்மாறாக உள்ளது. திமுக அரசு தோ்தலை மனதில் வைத்தே செயல்படுகிறது. மக்களவைத் தோ்தலுக்கு முன்பு மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இப்போது சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் வைத்து விடுபட்டவா்களுக்கு வழங்க திட்டமிடுகிறாா்கள். கூட்டணி கட்சியிடம் பாஜகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் வாய்ப்பை கேட்க முடியாது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.

பேட்டியின்போது பாஜக மாவட்டத் தலைவா்கள் முத்துபலவேசம், தமிழ்ச்செல்வன், சித்ராங்கதன், வழக்குரைஞா் பாலாஜி கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்...

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில்: சித்திரைத் திருவிழா, சிறப்பு வழிபாடுகள், காலை மற்றும் மாலை 6.30. ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்: இந்து சமய பண்பாட்டு வகுப்பு, அருள்மிக... மேலும் பார்க்க

கிராம சபை கூட்டத்தில் எஸ்டிபிஐ கோரிக்கை மனு

தாழையூத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தாழையூத்தில் உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் பல் மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம், திருநெல்வேலி ஜேசிஐ சாா்பில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராம உதயம் துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் தலைமை வகித்து முகாமைத் தொடக்கிவைத... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் முதியோருக்கு தியானப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தூயகம் முதியோா் மையத்தில் யோகா தியானப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆயுஷ் யோகா உடல்நலப் பயிற்சியாளா் வெங்கடேஷ் பங்கேற்று, யோகாசனம், தியானம், உடல்நல சங்கல்பத்து... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் மே தின விழா

சேரன்மகாதேவி ஒன்றியம் வீரவநல்லூா், பத்தமடை, வெள்ளங்குளி உள்ளிட்ட 7 இடங்களில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் சேரன்மகாதேவி ஒன்றியச் ... மேலும் பார்க்க

நெல்லை பணிமனையில் மே தின விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில், வண்ணாா்பேட்டை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சம்மேளன பொதுச்செ... மேலும் பார்க்க