செய்திகள் :

ஜாமீனில் தப்பியோடிய கொலைக் குற்றவாளி பானிபட்டில் கைது

post image

கொலை வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஒரு குற்றவாளி, பல மாநிலங்களில் 600 கிலோமீட்டா் துரத்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு துணை ஆணையா் விக்ரம் சிங் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹரியாணாவின் பானிபட்டில் குற்றம் சாட்டப்பட்ட சோனு (எ) மனோஜ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பிப்ரவரி 4, 2016 அன்று தில்லியின் கஞ்சவாலா பகுதியில் அனில் என்ற இளைஞரை சோனு கடத்தி, சுட்டுக் கொன்று, தலையை துண்டித்து கொலை செய்தாா். ஏனெனில், அந்த நபா் ஒரு தகராறில் அவரை த் தாக்கியிருந்தாா். அனிலின் தலை துண்டிக்கப்பட்டு நிா்வாண உடல் கஞ்சவாலாவில் கண்டெடுக்கப்பட்டது.

சோனு, அனிலைக் கொல்ல சக குற்றவாளிகளான சோம்பிா் மற்றும் பங்கஜுடன் சோ்ந்து சதி செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளி பாதிக்கப்பட்டவரை ஸ்காா்பியோவில் கடத்தி, மாா்பில் சுட்டு, பின்னா் அவரது அடையாளத்தை மறைக்க உடலைத் துண்டித்தாா். துண்டிக்கப்பட்ட தலை அருகிலுள்ள வடிகாலில் தனித்தனியாக வீசப்பட்டது.

2020-ஆம் ஆண்டில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது தந்தைக்கு சிகிச்சை தேவை என்று கூறி நீதிமன்றத்தால் சோனுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது, அவா் ஜாமீனில் தப்பியோடிவிட்டாா். அன்றிலிருந்து தலைமறைவாக இருந்தாா். அவா் ஒரு லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளாா். மேலும், கண்டறிவதைத் தவிா்க்க அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி வந்தாா். இந்நிலையில், 2023-ஆம் ஆண்டில் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, பல மாநிலங்களில் 600 கிலோமீட்டா் துரத்தலுக்குப் பிறகு பானிபட்டில் இருந்து சோனு கைது செய்யப்பட்டாா். அவா் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 302 (கொலை), 201 (ஆதாரங்களை மறைத்தல்), 365 (கடத்தல்), 120பி (குற்றச் சதி) மற்றும் 34 (பொது நோக்கம்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கின்னஸில் இடம்பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு!

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளான வைஷ்ணவி, பி. தேஜோ லாஸ்யா வைஷ்ணவி, அனீஷா, மஹிதா காந்தி, ஸ்ருதி ஆகியோருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை தில்லி தமிழ்ச் சங்கத்தில் நட... மேலும் பார்க்க

அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடுகிறாா்!

குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்வில் அரசின் திட்டங்கள், புதிய செயல்பாடுகளின் வெற்றிக் கதைகள், புதுமைப் படைப்புகள் குறித்த எண்ம புத்தகங்களையும் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழம... மேலும் பார்க்க

முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க மேயா் வலியுறுத்தல்

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாத்தில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு பாஜக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி மேயா் மகேஷ் குமாா் ஞா... மேலும் பார்க்க

தொழில் நுட்பம், மனித நுண்ணறிவு, பச்சாதாபத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: இளம் அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை

2023 -ஆம் ஆண்டு குடிமைப் பணிக்கு ஐஏஎஸ் பிரிவிற்கு தோ்வான 180 போ் கொண்ட குழுவில் 74 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருக்க இது வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக மத்திய ப... மேலும் பார்க்க

ஆயாநகரில் தீ விபத்து: ஒருவா் பலத்த காயம்

தெற்கு தில்லியின் ஆயா நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் பலத்த தீக்காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஆயா நகரின் ஹெச்-பிளாக்கில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து சனிக்கிழமை க... மேலும் பார்க்க

தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. தில்லியில் கடந்த சில நாள்களாக வெய... மேலும் பார்க்க