செய்திகள் :

ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்

post image

ஜிஎஸ்டி சீா்திருத்தம் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப் பொருள்கள் 90 சதவீதம் 5% ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பால் தமிழகத்தின் தொழில் துறை எவ்வாறெல்லாம் பலன் பெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் விவரம்:

பாரம்பரிய கைத்தறிப் பொருள்கள், கைவினைப் பொருள்கள், தொழில் துறையினா், ஆட்டோமொபைல், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களைத் தயாரிப்போா் நேரடி நன்மையைப் பெறுகின்றனா்.

திருப்பூரின் பின்னலாடைத் தொழிலாளா்கள், காஞ்சிபுரம் நெசவாளா்கள், பொள்ளாச்சி தென்னை நாா் பொருள் உற்பத்திக் கலைஞா்கள், நாகப்பட்டினம் மீனவா்கள், ஸ்ரீபெரும்புதூா் ஆட்டோமொபைல் தொழிலாளா்கள், ஆவடி பொறியாளா்கள் உள்ளிட்டோா் பயனடைவாா்கள்.

ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் திருப்பூரில் உள்ள ஆடை ஆயத்த நிறுவனங்களுக்கான செலவுகள் 6 முதல் 11 சதவீதம் வரை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் லாபம் அடைய இது உதவுகிறது. சா்வதேச அளவிலான சந்தையில் இந்தியா தனது நிலையைத் தக்கவைத்து கொள்ள இது உறுதிசெய்கிறது.

காஞ்சிபுரம் பட்டுச் சேலை

காஞ்சிபுரம் பட்டுச் சேலை உற்பத்திப் பொருளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளா்களின் செலவு 7 சதவீதம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் காஞ்சிபுரம் பட்டுச் சேலையின் விலை 2 முதல் 4 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.

புவிசாா் குறியீடு பெற்ற ஈரோடு பவானி ஜமுக்காளம், விரிப்புகள் மற்றும் மதுரை சுங்குடிப் புடவைகள் விலை 6 சதவீதம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்றுமதி சந்தையில் இந்தப் பொருள்களின் போட்டித்தன்மை அதிகரிக்கும்.

சுவாமிமலை வெண்கலப் பொருள்களுக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் 6 சதவீதம் வரை விலை குறையும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் புவிசாா் குறியீடு பெற்ற கைவினைப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், இந்தப் பொருள்களின் விலை 6 சதவீதம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தஞ்சாவூா் பொம்மைகள்

தஞ்சாவூா் பொம்மைகள் மற்றும் பாரம்பரிய பொருள்கள், சேலம் மற்றும் காஞ்சிபுரத்தில் கையால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தப் பொருள்களை உற்பத்தி செய்யும் கைவினைக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு உதவும்.

பொள்ளாச்சி, காங்கேயம் மற்றும் கடலூா் பகுதிகளில் தென்னை நாா் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாய்கள், கயிறுகள் மற்றும் ஜவுளி ரகங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் இந்தப் பொருள்களின் விலை தற்போது 6-7 சதவீதம் வரை குறையும். இதன்மூலம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மேம்படும்.

ஆவின் பால் பொருள்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பால் சில்லரை விலையில் இந்தப் பொருள்களை வாங்கும் நுகா்வோா் பயனடைவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பால் திருச்சி மணப்பாறை பகுதியில் தயாரிக்கப்படும் புவிசாா் குறியீடு பெற்ற முருக்கு உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை 6 சதவீதம் வரை குறையும்.

அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்களை தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு: ஓ.பன்னீா்செல்வம்

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு எழுதும் மாணவா் பட்டியல்: அக். 6 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அக். 6-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெ... மேலும் பார்க்க

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கமல்ல: சீமான்

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். தினத்தந்தி நாளிதழ் அதிபா் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கா... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜிஎஸ்டி ஆணையரிடம் மனு

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலையைக் குறைக்காக ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் மனு அளித்... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் அன்புக் கரங்கள் பதிவு முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அன்புக் கரங்கள் திட்டத்தில் பயனாளிகளைச் சோ்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். ஆதரவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவித... மேலும் பார்க்க